பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தப் பருவம் 475 சேடுபடு புத்தேள் நிலத்துப் புனிற்றிளம் சேதா வயிற்று முட்டச் சேங்கன் றெனத்தடவு மடிமடை திறந்துற்று தம்பால் சினைக்கற் பகத் தேடுபடு தடமலர்த் தேன்.அருவி யொடுசொரி தேரியொடு கால்நிரம்ப இழுதுபடு கழனியும் தெய்வ மணம் நாறஏன் றின்சுவை முதிர்ந்து விளையும் காடுபடு செந்நெல்பைங் கன்னல்நிகர் பூள்ளுர கனிவாய் முத்தம் அருளே கங்கைக்கு நெடியவன் தங்கைக்கும் ஒருமகன் கனிவாய் முத்தம் அருளே என்பது. எருமைகளின் தன்மை பற்றி ஈண்டுக் குறித்தது போலக் குமர குருபரர் தம் திருவாரூர் நான்மணி மாலையில் தமிழிலும், கருந்தாது கடுத்த பெரும்பணை தாங்கும் படாமருப் பெருமைபெங் குவளை குதட்டி மடிமடை திறந்து வழிந்த பாலருவி கரைபொரு தலைப்பப் பெருபூந் தடத்து என்றும், முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழில், பானறு செந்நெல் பசுங்கதிர் கறித்துமென் பைங்குவளை வாய்குதட்டும் பணைமருப் பெருமைமடு மடிமடை திறந்ததீம் பால் ஆறு பங்கயச்செந் தேறுை டன்கடவுள் வான றெனப்பெருகும் என்றும் பாடி இருத்தல் காண்க. (50)