பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரானைப் பருவம் 483 கைகள் கூப்பித் தொழுதெழுந் தத்திசை மெய்யில் ஆனந்த வாரி விரவிடச் செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி ஐயம் நீங்க வினவுவோர் அந்தனர் சம்பு வின்அடித் தாமரைப் போதலால் எம்பி ரான் இறைஞ் சாய்இஃ தென் எனத் தம்பி ரானைத்தன் உள்ளம் தழிஇயவன் நம்பி ஆரூரன் நாம்தொழும் தன்மையன் எனவரும் தம்வாக்குகளால் தெரிவிக்கின்றனர். நம்பி ஆரூரரும், - இந்திரன் மால்பிரமன் எழிலார் மிகுதேவர் எல்லாம் வந்தெதிர் கொள்ளஎன்னை மத்தயான அருள்புரிந்து மந்திர மாமுனிவர் இவன்யா ரென எம் பெருமான் நந்தம் ஆரூரன் என்ருன் நெர்டித்தான்மலை உத்தமனே என்று பாடிய திருப்பாட்டாலும் தெளியலாம். சேக்கிழார் பெருமானுர்க்கு அடியார் புகழை அறிவிப் பதில் பெருவிருப்பம் உண்டு என்பதைச் சேக்கிழார் வாக்கே தெரிவிக்கும். அளவி லாத பெருமையர் ஆகிய அளவி லா அடி யார்புகழ் கூறுகேன் அளவு கூட உரைப்பரி தாயினும் அளவில் ஆசை துரப்ப அறைகுவேன் என்ற இடத்துப் புலளுதல் காண்க. இதல்ை 'கீர்த்தி*எழுகுறுமுறுவல்' எனப்பட்டது. சேக்கிழார் திருவடிகளை அன்பர்கள் தம் இதயத்து வைத்துப் பூசித்துப் போற்றியதை முன்பு கண்டன, ஆண்டுக் காண்க. 'சைவத்தின்மேற் சமயம் வேறில்லை. அதில் சார் இது மாம் தெய்வத்தின்மேற் தெய்வம் இல்லை என்றும், சைவ சமயமே சமயம்' என்றும் அனுபவ ஞானிகள் கூறுவதால்