பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 வாரானைப் பருவம் அஃது உயர் சைவமாயிற்று. சேவையர் என்பார் வேளாளர். இவர்கள் சேவை (காளைகளை) வைத்திப்பதால் இப் பெயர்க்கு உரியர் ஆயினர். அவர்கள் கொடை, கொண்டல் போன்று கைம்மாறு வேண்டாது ஈயும் தன்மையது. கம்பர் இதனை உணாந்து, செட்டிமக்கள் வாசல்வழி செல்லோமே செக்காரப் பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே-முட்டிப்புகும் பார்ப்பார் அகத்தை எட்டிப் பாரோமே எந்நாளும் காப்பாரே வேளாளர் காண் என்றதாலும், மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை ஆழி திருத்தி அருளும்கை-சூழ்வினையை நீக்கும்கை என்றும் நிலைக்கும் கைநீடுழி காக்கும்கை காராளர் கை என்ற தலுைம், 'வேளாள ன் என்பான் விருந்திருக்க உண்ணு தான்” என்பதாலும் அவர்கள் கரதலம் கொண்டல்நிகர் கரதலமாயிற்று. வேளாளர்கள் பிறர்க்குக் கொடுக்கக் கற்றவர்களே அன்றி, வாங்கக் கற்றவர் அல்லர் என்ற அரிய குறிப்பைக் கற்பனைக் களஞ்சியமாம் சிவப்பிரகாசரும் அப் பரை நோக்கி, ଶଳ୍କ கொள்ளைக்கதிர் முத்தின் பந்தரும் சின்னமும் ೧rಿಸಿ பிள்ளைக் கதுதகும் நாவர சாய பெருந்தகையோய் கள்ளைக் குவளை உமிழ்வீழி யில்படிக் காசுஒன்றுநீ வள்ளைக் குழை உமை பங்காளர் கையில்என் வாங்கினையே என்று கூறினர். தேசி லங்குமுகில் குன்றை யாதிபதி தொண்டர் சீர்பரவு சேக்கிழார் வாசல் அன்றுமுதல் இன்று காறும்இனி மேலும் வாழையடி வாழையாய்