பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரானைப் பருவம் 487 நந்தி எம்பிரான் முதற்கண நாதர்கள் நலங்கொள்பன் முறை கூட அந்த மில்லவர் அணுகிமுன் தொழுதிரு அணுக்களும் திருவாயில் சிந்தை ஆர்வமும் பெருகிடச் சென்னியில் சிறியசெங் கையேற உய்ந்து வாழ்திரு நயனங்கள் களிகொள உருகும்.அன் பொடுபுக்கார் என்பன போன்ற பாடல்களைக் காண்க. இதனை உட்கொண்டே 'மன்றைப் பராவினழு குன்றைப் பிரான்” எனப்பட்டார். மேலும் பெரிய புராணம் பாடச் சிதம்பரம் போந்தார் அல்லரோ இதனே, தில்லை எல்லையில் வந்து வந்து எதிர் தெண்ட கைவிழுந்தெழுந் தல்லி சேர்கம வத்த டத்தினில் மூழ்கி அப்பல வாணர்முன் ஒல்லை சென்றுப னிந்து கைத்தலம் உச்சி வைத்துளம் உருகி ைநந் தெல்லே கானரி தாய போரொளி இன்ப வாரியில் மூழ்கியே அடைய லார்புரம் நீறெ முத்திரு நகைசெய் தன்ருெரு மூவரைப் படியின் மேல் அடி யைக்கொ ளும்பத பங்க யங்கள் பணிந்துநின் றடிகளே உனதடியர் சீர்அடி யேன்.உ ணர்த்திட அடியெடுத் திடர்கெ டத்தரு வாய்எ னத்திரு அருனை எண்ணிஇ றைஞ்சினர் உமாபதி சிவாசாரியார் பாடி இருத்தலாலும் உணரலாம். உலகில் தொண்டே தலைசிறந்தது. தொண்டு எனினும் சேவை எனினும் ஒன்றே. இந்த அரிய செயலைப் புரிந்து பெருமை கொள்பவர் சேவையர் எனவும் படுவர். இவர்களே வேளாளர் என்றும் கருதுவர். இவர்கள் தொண்டு நாட்டில் இல்லை ஆயின், நாடே அழிந்து போகும். நாடு