பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 வாரானைப் பருவம் என்ற பெயர்க்கே இடம் இல்லாமல் போகும். இத்ககைய பெருமைகட்கு உரிய குலத்தில் பிறந்தவர் சேக்கிழார். அக் குழத்தில் பலர் பிறந்திருந்தாலும், அவர்கட்கெல்லாம் இவர் சிரோரத்தினமாய்த் திகழ்ந்தமையின், சேவையர் குல சிகாமணியாயினர். தொண்டை நாட்டினை வளம்படுத்தி, நாற்பத்தெண்ணு யிரத்து நற்குடிகளை இந்த நாட்டில் குடிபுகுமாறு செய் தவன் கரிகாற்சோழன். அக்குடிகளுள் ஒன்று சேக்கிழார் குடி. கூடல்கிழான், புரிசைக்கிழான், வெண்குளப்பாக் கிழான் என்பார்களே ஒட்டிய குடிகள் சிறப்புடையன வாயினும், சேக்கிழான் குடிக்குள்ள பெருமை சிறப்பானதே ஆகும். கூடல், வெண்குளப்பாக்கம் என்ற இடப் பெயர்களை ஒட்டிக் குடிகள் எழலாயின. ஆணுல், சேக்கிழான் குடியோ வேளாளர்கட்குரிய இலச்சினே) இரடபக்குறியினை உரிமையாகக் கொண்டெழுந்த குடி என்ற காரணத்தாலும் சேக்கிழார் குடி சிறப்புக்குரியதாயிற் று. இக் குடியின் சிறப்பைச் சேக்கிழார் பெருமான ர் இக் குடியில் தோன்றி அனபாயனுக்குத் தலைமை அமைச்சராகும் மாண்பினேயும் பெற்று, பெரிய புராணம் எழுதும் பேறும் பெற்று, அம் மன்னனல் பல சிறப்புக்களையும் பெற்றமையினுல் நாம் உணர்கின்ருேம். அதன் பிறகே சேக்கிழார் குடிக்குத் தன்னேரில்லாச் சிறப்பு ஏற்பட்டது. இதனை உமாபதி சிவனர் 'குன்றத்துாரில் சேக்கிழார் திருமரபு சிறந்த தன்ருே' என்றும், நாடெங்கும் சோழன்முனம் தெரிந்தே ஏற்றும் நற்குடிநாற் பத்தெண்ணு யிரத்துவந்த கூடல்கிழான் புரிசைகிழான் குலவு சீர்வெண் குளப்பாக்கி ழான் வரிசைக் குளத்து ழான் முன் தேடுபுக ழாரிவரும் சிறந்து வாழச் சேக்கிழார் குடியில்இந்தத் தேசம் உய்யப் பாடல்புரி அருண்மொழித்தே வரும்பின் நந்தம் பாலரு வாயரும்வந் துதித்து வாழ்ந்தார் என்றும் பாடினர், (52)