பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 வாரானைப் பருவம் உரன் என்னும் தோட்டியால் ஒர் ஐந்தும் காப்பான் வரன் என்னும் வைப்புக்கோர் வித்து’’ என்றும், அடல்வேண்டும் ஐந்தின் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு to * என்றும் திருக்குறள் கூறுவதால் ஐந்து நிகழ் கந்தம் கெடுதல் வேண்டும் என்பது பெற்ரும். மேலும், இவ்வைந்து கந்தங்களைப் பகுத்துப் பகுத்துக் கூறத் தொடங்கின் கீழ் வருமாறு பகுக்கப்படும். அவை, உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம் எனப் படும். இவற்றுள் உருவக் கந்தம் பூத உரு, உபாதாய உரு என இருவகைப்படும். பூத உரு மண், நீர், தீ, காற்று என்னும் நான்காகும். வேதனைக் கந்தம், குசல வேதனே (சுக அறிவு) அகுசல வேதனே (துக்க அறிவு) குசிலா குசல வேதனை (சுக துக்க அறிவு) என்றும் மூவகையாகும். குறிப்புக் கந்தம், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தும் மனம் ஒன்றும் ஆகிய ஆறும் ஆகும். பாவனேக் கந்தம் மனே வாக்குக் காயங்களினல் உண்டாகும் புண்ணிய பாவங்களாகும். விஞ் ஞான கந்தமாவது, மேலே கூறப்பட்ட உருவம், வேதனே, குறிப்பு, பாவனே ஆகிய இந் நான்கு கந்தங்களின் உண்மை நிலையை அறியும் அறிவாகும். இந்தப் பஞ்ச கந்தங்களும் கெடுதல் முத்தி இன்பம் என்பவர்கள் பெளத்தரில் செள்த் திராந்திகர். இவர்கள் மதக் கொள்கையினச் சிவஞான சித்தி யார் பரபக்கம், ஓங்கிய உருவ மோடும் வேதனை குறிப்பி ைேடும் தாங்குபா வனவிஞ் ஞானம் தாம்.இவை ஐந்தும்கூறி பாங்கிளுல் சந்தா னத்தில் கெடுவது பந்த துக்கம் ஆங்கவை பொன்றக் கேடாய் அழிவது முத்திஇன்பம் எனக் கூறுகிறது. முக்குணமாகிய ராஜச தாமச சாத்வீகங்களும் கெடுதல் இன்பம் என்பவர்கள் நிர்க்குணவாதிகள். இவர்களேச்