பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 வசரசனைப் பருவம் என்று கூறியதோடு நில்லாது, இறைவனே ஞானமயன் என்று கூறி இன்புறுவாராயினர். கான நாடு கலந்து திரியில்என் ஈனம் இன்றி இருந்தவம் செய்யில்என் ஊனை உண்டல் ஒழிந்துவான் நோக்கில்என் ஞானன் என்பவருக் கன்றி நன்கில்லையே என்றது உம் காண்க. இறைவனேப் பாடுதலே இன்பு என்பது எவரும் அறிந்த உண்மை. இறைவனே சுந்தரரை நோக்கி, மற்றுநீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம் பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பில் மிக்க அர்ச்சனை பாட்டே யாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுகென்ருர் துர்மறை பாடும் வாயார் என்றனர். பன்மாலே திரள் இருக்கத் தமை உணர்ந்தோர் பாமாலைக் கேநீதான் பட்சம் என்று நன்மாலே யாஎடுத்துச் சொன்னர் நல்லோர் நலம்.அறிந்து கால்லாத நானும் சொன்னேன் என்றுதாயுமானவரும் பாடி இன்பு கண்டார். உயிர் கெடுதல் என்பதுடன் இன்பு என்னும் சொல்லைக் கூட்டுக. உயிர் கெடுதலாவது பாடுங்காலத்துத் தம்மை மறந்து அத்து விதமாய் நிற்றலே என்க. உயிர் கெட்ட நிலையில் இன்பு பெற்றதை மணிமொழியார், வான்கெட்டு மாருதம் மாய்ந்தழல் நீர்மண் கெடினும் தான் கெட்டல் இன்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு ஊன் கெட் டுயிர்கெட் டுணர்வுகெட் டென் உள்ளமும் (போய் நான் கெட்ட வாபாடித் தெள்ளேனம் கொட்டாமோ என்று அறிந்து அறிவித்ததை அறியவும்.