பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரானைப் பருவம் 517 சங்கநூலில் பல இடத்தும் இவ்வுவமை கூறப்பட்டுள்ளது. 'அரவுரிஅன்ன அறுவை” என்ற பொருநர் ஆற்றுப் படை புகல்வதைக் காண்க. இதல்ை நம் தமிழ் நாட்டவர் மிக மெல்லிய ஆடைகளை நெய்தமை தெரிதல் காண்க. சேக்கிழார் பெருமாளுர் மேலே சொல்லப்பட்ட சிறப்புக்களுக்குக் காரணர். ஆதலின், அவர்தம் திருவடிகளே அணுகுபவர்கள், உள்ளத்தில் வைத்துப் போற்றுகின்றனர் ஆதலின், அத்தகைய திருவடிகளைப் பெயர்த்து வருமாறு வேண்டுகின்றனர். காயாத கால் நீத்த மலர் என்பன மல்லிகை முல்லை போல்வன. பிரம்மா விஷ்ணு உருத்திரர் என்னும் மூவருள் திரு மாலுக்குச் காத்தல் தொழிலை ஏற்று நடத்துமாறு முக்கண் மூர்த்தியின்கட்டளை இருத்தலின், திருமால் காக்கும் தெய்வம் ஆயினர். அவரும் உழவர் உழுது பயிரிட்டு உலகை ஆதரிப் பதல்ை தேவை இல்லை என்று கூறி வேளாளர் சிறப்பை விளக்கக் கூய் ஆதரிக்கும் குணம் தழுவும் சேவையார் குலம் என்றனர். பலகுடை நீழலும் தம்குடைக்கீழ் காண்பர் அலகுடை நீழ லவர் 'உழுவார் உலகத்தார்க்கு ஆணி’ என்று குறட்பா கூறுவனற்றைக் காண்க. உழவர்களே உலகை ஆதரித்துப் பசி யின்றி வைப்பவர் என்பது, கார்நடக்கும் படிநடக்கும் காரளர் தம்முடைய எர்நடக்கும் எனில் புகழ்சால் இயல் இசை நாடகம் நடக்கும் சீர் நடக்கும் திறம் நடக்கும் திருவற்த்தின் செயல்நடக்கும் பார்நடக்கும் படைநடக்கும் பசிநடக்க மாட்டாதே என்ற ஏர் எழுபது பாடலால் தெரியவருகிறது.