பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 வாரா?னப் பருவம் 'கார்க்கோள் கொடிமுல்லை குருந்தம்ஏறிக் கருந்தேன் ஆர்க்கும் பழையனூர்' என்றும், (மொய்த்து 'பெடை வண்டறையும் பழையனுரர்' என்றும், பிள்ளையும் சிறுமறியும் கலையும் எல்லாம் கங்குல் அணையும் பழையனுரர்' என்றும், (சேர்ந்து 'தவழும் கொடிமுல்லே புறவம் சேர நறவம்பூத்து அவிழும் பழையனூர்' என்றும், 'தண் பழையனூர்' என்றும் புகழ்ந்துள்ளனர். "பன்மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழைய னுார்' என்று சுந்தரரும் புகழ்ந்துள்ளனர். இவற்றை எல்லாம் உட்கொண்டே ஆசிரியர் 'நலத்தின் உயரும் பழைய னுார்' என்றனர். பழையனூரில் வேளாளர் மிகுதி. அவர்கள் நீதி நெறியி னின்றும் தவருதவர்கள். சொன்ன சொல்லைத் தட்டாத வர்கள். வாய்மையின் பொருட்டு உயிரையும் ஈய வல்ல வர்கள். இம்பாடலில் வணிகனுக்கு வாக்குக் கொடுத்தபடி தீமூட்டி ஏழு பதின்மர் அதில் மூழ்கி உயிர் விட்டனர். பழைய னுரர் வேளாளர் என்ற சிறப்புக் குறிப்பே உள்ளது. இவ் வேளாளர் உயிர்விட்ட அக்கினிக் குண்டம் இன்றும் பழைய னுாரில் உள்ளது. - வணிகன் ஒருவன் வேற்று மகளிர் இன்பத்தில் ஈடு பட்டதால், கட்டிய மனைவி கண்டித்தனள். அத்தொந்தர வால் அவன் அவளை வஞ்சனேயால் கொன்ருன். அப்பழிக்குப் பழிவாங்கப் பேய் வடிவில் உருத்தாங்கிச் சத்திரத்தில் தங்கி இருந்தனள். அவ்வழியே வணிகன் சென்றபோது அவனைப் பற்றி, "நீ என்னை இங்குத் தனியே விட்டுப் போவது முறையோ? என்னோடு கூடவே இச்சத்திரத்தில் தங்கிப் பொழுது விடிந்ததும் போக வேண்டும்” என்று தொந்தரவு செய்தாள். வணிகன் அவ்வடிவு பேய்வடிவு என்று நன்கு தெரிந்து, அதற்கு இசையான் ஆயினன். என்ருலும், பேயாம் நீலி விட்டிலள். அவள் அதுபோது அவ்வழியே வந்த வேளாளரிடம் தான் அவன் மனைவி என்ருள். தன்னைத் தனியே விட்டுச் செல்வதாகவும் கூறிள்ை: முறையிட்டாள்.