பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரா?னப் பருவம் 537 வெதிர்ஏப் கரத்துமென்தோல் ஏய்சு வல்வெள்ளை நூலில்கொண்மு அதிர்ஏய்மறையின் இவ்வாறு செல்வீர் என்று குறிப்பிடுதல் காண்க. இவர்கட்கு முக்கோல் தண்டு உண்டு என்பது, நூலே கரகம் முக்கோல் ம்ணையே ஆயும் காலே அந்தணர்க் குரிய என்று தொல்காப்பியம் கூறுவதனுல் அறியலாம். இதற்கு இலக்கியமாக, எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல் உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவல்அசைஇ, வேருேரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயல்மாலைக் கொளை நடை அந்தணரீர் என்ற கவித்தொகை அடிகளை எடுத்துக் காட்டலாம். வணிகர்களின் பண்பு இத்தகையது என்பதைப் பட் டினப் பாலை குறிப்பிடுகையில், நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நல்நெஞ்சினேர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்பநாடி கொள்வது உம் மிகைபடாது கொடுப்பது உம் குறைபடாது பல்பண்டம் பகர்ந்து வீசும் இயல்பினர் என்கிறது. வள்ளுவரும் இவர்கள் இயல்பை, # * § - ெ - 4 × - - * பி * - வாணிகம் செய்வார்க்கு வாணிகம் போணிப் பிறவும் தம் போல் செயின்' என்றனர்,