பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பருவம் 567 சேக்கிழார்க்கு ஒரு புடை சந்திரன் ஒப்பாதல் இரும்பும் பொன் என்னும் பெயர் அளவில் பொன்னுடன் ஒப்புமையாதல் போன்றது. அங்ங்னம் இருந்தும் தமது கருணேப் பண்பால் சந்திரனை அழைத்தது எனச் சேக் கிழாரின் அருள் இரக்கத்தினை ஆசிரியர் போற்றினர். கொடி வான் என்றது குன்றை நகரின் மாளிகையின் உயர்ச்சியைக் குறித்த வாரும். அது போலவே குன்றை நகர் மாளிகையின் நிலா முற்றம் ஆகாய கங்கை தோயும் என்றது அதன் உயர்ச்சியினே உயர்வு நவிற்சி அணியின் பால் வைத்துப் பாடியதே அன்றி வேறன்று. இதுவும் பேத உபாயம் தோன்றப் பாடப்பட்டது. (65) 5. எம்மைஇனி தாள்பவன் செம்மைமதி யவன்c இயற்கையே வெண்மைமதியோன் எற்றைக்கும் மிகுதண்மை யுடையரோ டுறவுகொளும் இயல்பினுல் எங்கள் ஐயன் வெம்மையுடிை யவர்களொடு மதிதொறும் மதிதொறும் விராய் உறவு கொள்ளுவோன் நீ வியக்கும்ஒரு தன்மையோன் எங்கள்கிரு பாமூர்த்தி மெய்ம்மைஒரு கால்வளருவாய் மும்மையுல கறியஒரு கால்தேய்கு வாய்இவை முயங்காதொர் கால்ஒழிகுவாய் மொழியும்நீ இவைஒர்ந்தும் ஆட்வா என்றது முழுக்கருணை காண்எஞ்ஞான்றும் அம்மை அனை யார்மருவு குன்றைநகர் ஆளியுடன் அம்புலி ஆடவாவே அருளுருத் தேசுபொலி அருள்மொழித் தேவனுட்ன் அம்புலி ஆட்வாவே (அ. சொ.) செம்மை-செம்மையான, மதியவன்அறிவுடையவன், அதாவது செம்பொருள் காணும் அறிஞர், வெண்மை மதியோன்-வெள்ளிய சந்திரன், வெள்ளறிவுடை யவன். அறிவீனன் என்பது கருத்து. எற்றைக்கும்-எக்காலத்