பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பருவம் 577 கையினை நிறுத்திப் பாடுபவன், வாக்கி-அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் பயன்களே அமைத்துப் பாடுபவன், கழகம்-கூட்டம், சபை, பரவு-போற்றும். விளக்கம் : செறி தமிழ் என்றது நிறைந்த தமிழ் என்ற பொருளேத் தரும். தமிழுக்குச் செறிவாவது எல்லாக் கலை களும் நிறைந்திருத்தலாம். தமிழில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணம் உண்டு. பொருள் இலக்கணம் என்பது ஏனைய மொழிகளுக்கு இல்லை. மேலும் இம்மொழி, இலக்கண வரம்பில் ஒழுகவல்லது. ஏனைய மொழிகள் அத் தகையன அல்ல. பொருள் இலக்கணமே தமிழுக்குச் சிறப்புத் தருவது என்பதை 'தள்ளாப் பொருளியல் பில் தண்டமிழாய் வந்திலார், கொள்ளார். இக்குன்று பயன்' என்று பரிபாடல் கூறுதல காணக. இவற்றை உட்கொண்டே பரஞ்சோதியார், கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந் தமிழ்ஏனே மண்ணிடைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடப்படக் இடந்ததா எண்ணவும் படுமோ என்று அறைகூவி அறிவிப்பாராயினர். பொருள் இலக்கணம் இரு பிரிவினயுடையது, ஒன்று அகம்; மற்ருென்று புறம். அகம் என்பது இக்கால விஞ்ஞான முறையில் (Science of t.ove) என்றும், புறம் என்பது (Science of War) என்றும் உணரப்படும். இவ்வரும்பெரும் பிரிவினை ஹோமர் என்பாரும், “Two things greater than all things are One is Love and the other is War.” என்து புகழ்ந்துள்ளனர்.