பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பருவம் 583 வாள்' என்று அன்ருே திருவள்ளுவரும் கூறியுள்ளனர்? கண்ணகியைக் காமக்கோட்டம் வணங்குமாறு, அவள் தோழி கூறியபோது, 'பீடு அன்று' என்று அன்ருே கூறினள்? தோழி 'பிறை தொழுக' என்றபோது தலைவி தொழா திருந்த நிலையினைத் திருவாவடுதுறைக் கோவை, தக்கோர் பணிகழல் செம்பொன் தியாகர் தடந்துறைசை முக்கோ உடையர் சடில வட்டத்தின் முளைமதிபோல் சொக்கோடு சொக்கரச் சுடர்வானில் வெண்பிறைத் தோற்றம்கண்டால் கைக்கோ கனக மலரே குவியும் நம் காரிகைக்கே என்று கூறுகிறது. இதில், 'சந்திரனைக் கண்டதும் கைககள் குவியுமே ஏன் குவியவில்லை" என்ற கருத்து இருத்தல்காண்க. திரு பிள்ளை அவர்களும் இதனை விளக்கமுறத் தமது சீர்காழிக் கோவையில், ஆலங் குடிகொள் மிடற்ருர் கழுமலத் தையர்செய்ய சீலம் குடிகொள் செழும்பொன்னி நாட்டில் சிறுபிறைகண் டேலம் குடிகொள் குழலாய் குவியும்எத் தாமரையும் கோலம் குடிகொள்நின் கைத்தா மரைகுவி யாமைஎன்னே என்று பர்டியுள்ளனர். இவ்வாறெல்லாம் அகப்பொருள் இலக்கணம் கூறு தலின், 'அன்பின் ஐந்திணை என நவின்ற நூலில் செப்பிய விதிப்படி” எனப்பட்டது.