பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584 அம்புலிப் பருவம் கன்னிப்பெண்கள் தமக்கு விரைவில் திருமணம் நடக்கப் பிறை தொழுது நிலாச்சோறு படைத்தலே எரு விட்டுச் சந்திரன வளர்ப்பதாகக் கவி கூறினர். சேக்கிழார் சிறப் புடைய உழவுத் தொழிலேயே எவர்க்கும் காட்டுதலின், உழவு தொழில் இவன் காட்டுத் தொழில் என்றனர். சந்திரன் தன்னிடத்து முயலைக் காட்டினுல், உழவர்கள் முயற்சியாகிய தொழிலைக் காட்டுவர் என்பதை 'முயல் இவன் காட்டு தொழில்' என்றனர். - முயல் என்னும் சொல், ஈண்டு முயலையும் முயற்சியை யும் விளக்கும் சொல்லாக அமைந்துள்ளது. சந்திரனது களங்கத்தை முயல் எனக் கூறுதல் கவிகள் மரபு. இதனை நாலடியாரில் வரும், ஒண்கதிர் வான்மதியம் சேர்தலால் ஓங்கிய அங்கண் விசும்பின் முயலும் தொழப்படுஉம் என்ற அடிகளால் உணராலாம். எருவால் வளர்ச்சியுண்டு என்று காட்டியவர் சேக்கிழார் என்பதையும், சந்திரா நீ முயலைக் (களங்கமாகிய முயலைக்) காட்டினல், இவர் முயற்சியாகிய முயலைக் காட்டுவர் என் பதையும், திரு. பிள்ளை அவர்கள், மொய்த்த எருஇடுதல் அதனுல் வளர்தல் உழவு தொழில் முயல்இவன் காட்டுதொழில்’’ என்ற வரிகளில் சுட்டிக்காட்டினர். இங்ங்னம் காட்டியதுடன், இந்நன்றி உள் உணர்ந் தனை என்னில் வாரா திருப்பை கொல்லோ' என்று எடுத்து மொழிந்து, இதன் வழி தான உபாயத்தை அமைத்துப் பாடியதையும் காண்க. உழவுத் தொழிலைச் சேக்கிழார் கைம்மாறு கருதாது செய்பவர் என்பதை 'மறிவரிய இந் நன்றி' என்றனர். சந்திரன் மதியோன் (அதாவது அறிஞன்) என்ற பெயர்