பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588 அம்புலிப் பருவம் அழகின் முன் இளம் பதம் என அணிவிளக் கென்ன விழவு கொண்டெழும் பேதையர் உடன்விளே யாட்டில் கழலொ டம்மனை கந்துகம் என்றுமற் றினைய மழலை மென்கிளிக் குலம்என மனேயிடை ஆடி பொற்ருெ டிச்சிறு மகளிர்ஆ யத்தொடும் புணர்ந்து சிற்றில் முற்றவும் இழைத்துடன் அடும்தொழில் சிறுசோ றுற்ற உண்டிகள் பயின் ருெளி மணிஊசல் ஆடி மற்றும் இன்புறு வண்டல்.ஆட் டயர்வுடன் வளர என்பன சித்திரக் கவிகள் எனலாம். ஆகவே, சேக்கிழார் சித்திரக் கவிஞரும் ஆவார். அவர் வித்தரக் கவி என்பதற்கு அவர்தம் பெரிய புராணமே தக்க சான்று. தொண்டர்களைப் பற்றிச் சுந்தரர் பாடிய பாடல்கள் பதினென்று, நம்பியாண்டார் நம்பிகள் பாடியுள்ள பாடல்கள் எண்பத்தைந்து. சேக்கிழார் பாடியுள்ள பாடல்கள் நாலாயிரத்து இருநூற்று இருபத்தாறு. இவ்வாறு விரித்துச் சேக்கிழார் பாடி இருத்தலின், அவர் வித்தாரக் கவிஞர் ஆவார். வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும் சாதிகள் நெறியில் தப்பா தனேயரும் அனையில் தப்பார் நீதிய புள்ளும் மாவும் நிலத்திருப் புள்ளும் மாவும் ஒதிய எழுத்தாம் ஐஞ்சும் உறுபிணி வரத்தாம் அஞ்சும் என்ற பாடலில், வீதிகள் விழவின் ஆர்ப்பு என்றதால் மக்கள் செழித்து, திருவிழாக்களே நடத்தினர் என நாட்டு வளத்தை யும், விரும்பினர் விருந்தின் ஆர்ப்பு என்ற தல்ை, நாட்டில் உள்ளவர்கள் வந்த விருந்தினரை உபசரித்து இனி வரும் விருந்தனரை எதிர் நோக்கி இருப்பர் என்ற நாட்டு மக்களின் விருந்தோம்பும் பண்பினையும், அந்தணர், அரசர் வணிகர்.