பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பருவம் 537

'அப்படியானல் யானும் சைவமரபு பற்றிச் சபாநாயகர் துதியை முன் வைத்ததில் தவறுண்டோ?' என்றபோது ஒது வார்களும் ஏனையோரும் பெட்டிப் பாம்புபோல் அடங்கி விட்டனர். இது சிவஞான முனிவரது நாவன்மையினேக் காட்டுதலின் அவர் நாவலர் தாமே! அத்தகைய நாவலர் "சேக்கிழான் அடி சென்னி இருத்துவாம்' என்று சேக்கிழா ரைப் பரவி உள்ளனர். இதனுல் நாவலோர் பரவு குன்றை நகர் ஆளி என்றனர். (69)


9. தலைமயிர் பறித்தும் அரை யில்பாய் உடுத்தும்
தழைத்திரள்கை வைத்தும்.உழலும்
சமுக்கர்மத மாம்களங் கம்பரவல் நீக்கிஉயர்
சைவநிலை எங்கும் ஆக்கும்
நிலவுடைய தம்பிரான் நின்களங் கம்போக்கி
நிகழ்புனித மேஆக்குவான்
நீடும்.இதன் மேல் உறுதி என்னகொல் நினக்கின்னும்
நேர்அளப் பரியசான்ருேர்
கலைபலவும் ஓர் உருக் கொண்ட்னேயர் அருள்நோக்கு
காதலார் நிற்கவும்நினைக்
கடைக்கணித் தாடவா என்றழைத் ததுபெருங்
கருணையே கங்கையினும்மிக்
கலைமருவு புனல்வளக் குன்றைநகர் ஆளியுடின்
அம்புல் ஆட்வாவே
அருளுருத் தேசுபொலி அருள்மொழித் தேவனுடின்
அம்புலி ஆட்வாவே

(அ. சொ) அரை-இடுப்பு, தழைத்திரள்-அடர்ந்த மயில் பீலிக்கற்றை, சழக்கர்-கீழ்களாகிய சமணர், பொய்யர் குற்றமுடையவர்கள், களங்கம்-மாசு, தம்பிரான்-சேக் கிழார்பெருமாளுர், புனிதமே-பரிசுத்த நிலையே, உறுதிநன்மை, என்னகொல் - என்ன இருக்கிறது? அளப்பரியஅளந்து சொல்லுதற்கு அருமையான, சான்ருேர்-அறிவால்