பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

606 சிற்றில் பருவம் போது அதனேக் காலால் தள்ளிக் கலைத்துவிட்டு விளையாடும் விளையாட்டாகும், ஆண்பாற் சிறுவர்கள் இவ்வாறு காலால் சிதைத்து விளையாடிய செய்தியினேக் கலித்தொகையிலும் காண்கின்ருேம். இதனை, சுடர்த்தொடீ கேளாய்! தெருவில் நாம்ஆடும் மணல்சிற்றில் காலில் சிதையா அடைச்சிய கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யும் சிறுபட்டி என்று கலித்தொகை கழறுதல் காண்க. இது சிறு வனது இரண்டாம் ஆண்டில் நிகழும் நிகழ்ச்சி என்பர். திருவீதிகள் நீண்டு இருப்பது சிறப்பாதலின் வாரும் என்றனர். வார் நீண்ட என்ற பொருளது என்பதை 'வாராரும் கடல்' என்ற இடத்துக் காண்க. விழா அருவிதி ஆதலின் திருவீதி ஆயிற்று. நித்திலங்கட்குச் சில குறைகள் உண்டு. இதனே முன்பே கூறியுள்ளோம். அக்குற்றங்கள் அமையா நித்திலம் என்பார் வண்ணித்திலம்’ என்றனர். சிற்றில்லை மணலால் அமைப்பது வழக்கம். இங்கு அமைத்த சிற்றில் முத்தால்ஆனதாம். இதனுல் நாட்டின் வளன் கூறிய தாயிற்று. இவ்வாறு சிறப்பிப்பது வீறுகோள் ஆணியின் பால் படும். இவ்வாறு பெண்கள் நித்திலத்தாலும், மணி யாலும் சிற்றில் இழைத்தனர் என்பதை, கழுவா மணியும் நிலவுவிரி கதிர்நித் திலமும் உமை அம்மை கண்ணில் உறுத்த அடிகேள் நின் காலில் உறுத்தல் கடன் அன்ருல் என முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழில் வருதல் காண்க. சிறுபறைப் பருவத்தை முன்கூறிச் சிற்றில் சிதைத் தலைப் பின் கூறும் வழக்கமும் உண்டு. அதுபோது சிறுபறைப்