பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/704

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. தாங்கும் வளவன் அனபாயன் தன்கண் மணியாய் அவன் அமைச்சர் தங்கள் சூளா மணியாய் உத் தமச்சோ முப்பல் லவன் எனும்பேர் ஓங்கும் படிகொள் விண்மணியாய் உவக்கும் அடியார் சரித்திரமுற் றுரைசெய் தருள் சிந் தாமணியாய் உயர்வு பூணின் இளம்பருவ வாங்கும் பிறைநல் நுதலார்செய் வண்டல் சிதைக்க வேண்டுவதோ வாழைக் குருத்து மதிநடுப்போய் மாரன்குேட்ைக்கோர் காம்பாகித் தேங்கும் திருத்தண் ட்கநாடா சிறியேம் சிற்றில் சிதையேலே செல்வம் செருக்கு குன்றைஅருள் செல்வா சிற்றில் சிதையேலே | அ. சொ.) மதி-சந்திர மண்டலத்தின், மாரன்-மன் மதன், வளவன்-சோழ மன்னன், அனபாயன்-அனபாய சோழன், அமைச்சர்-மந்திரிமார், சூளாமணி-முடிமணி, உத்தமச் சோழப் பல்லவன்-அனபாயன் சேக்கிழார் பெருமாளுர்க்கு இட்ட பட்டப் பெயர், படி-பூமி, விண்மணி, விண்ணில் விளங்கும் மணியாகிய சூரியன், உவக்கும்-மகிழும், இந்தாமணி-தேவலோகத்தில் உள்ள மணி, பூணின்-ஆபணரங் தளில்ை, நடு-வயிறு, தேங்கும்-அமையும், வாங்கும்-வளேயும் பிறை-பிறைச் சந்திரனைப் போன்ற, துதலார்-நெற்றி யுடைய மாதர், வண்டல்-மகளிர் விளையாடும் சிற்றில். விளக்கம்: தாங்கும் வளவன் என்றது கருத்து உயிர்கள் துன்புழுது செங்கோல் நடாத்தி உலகைக் காத்து வருவ தாகும். 'நெல்லும் உயிர் அன்று நீரும் உயர் அன்று, மன்னன் உயர்த்தே மலர்தலை உலகம்” என்று புறம் கூறுதலால்