பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/708

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626 சிற்றில் பருவம் பெரிய புராணம் விடயங்களைத் தரும் என்பது முன்பே கூறப்பட்டது. என்ருலும், மீண்டும் நினைவு கொள்வதற்குச் சிந்தாமணி போன்ற தொண்டர் புராணம் வேண்டிய தைத் தரும் என்பதற்கு ஒர் இடத்தைக் காட்டி மேலே செல்வோமாக. புராணம் என்றதும் வெறுங் கட்டுக் கதை களைக் கூறிச் செல்லும் என்று கரைகிறவர்களும் இந்நாட்டில் உண்டு. அவர்கள் பெரிய புராணத்தை அவ்வாறு கருத முடியாது. பெரிய புராணம் ஒரு வரலாற்று நூல். ஆகவே, வரலாற்றறிவுடையார்க்கு வேண்டிய குறிப்புக்களையும் பெரிய புராணம் தன்னகத்தே கொண்டுள்ளது. இதற்குரிய சான்றுகளைப் பெரிய புராணம் கொண்டு நிலை நிறுத்து வோமாக. மூர்த்தி நாயனர் புராணத்துள், கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவல் மானப் படைமன்னன் வலிந்து நிலம்கொள் வானுய் யானைக் குதிரைக் கருவிப்படை வீரர் திரண்ட சேனைக் கடலும் கொடுதென்றிசை நோக்கி வந்தான் வந்துற்ற பெரும்படை மண்புதை யப்ப ரப்பிச் சந்தப்பொதி யில் தமிழ் நாடுடை மன்னன் வீரம் இந்தச்செரு வென்றுதன் ஆணை செலுத்தும் ஆற்ருல் கந்தப்பொழில் சூழ்மது ராபுரி காவல் கொண்டான் என்ற குறிப்பு வருகிறது. இங்ங்ணம் காவல் கொண்டவன் களப்பிரர் குலக் காவல னை அச்சுதவிக்கந்தன். இதனை வேள்விக்குடிப் பட்ட யத்தாலும் அறியலாம். சிறுத்தொண்டர் புராணத்துள், மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித் தொன்னகரம் துகளாகத் துணைநெடுங்கை வரைஉகைத்துப்