பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/709

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றில் பருவம் 62? பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்ன எண் ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார் என்ற பாடல் உளது. மன்னவன் ஆவான் ஈண்டு நரசிம்ம வர்ம பல்லவன். அவனுக்காகச் சிறுத்தொண்டர் (போருக்குச் சென்ற போது அவரது திருப்பெயர் பரஞ்சோதி என்பது) வாதாபி நகரத்திற்குப் படை திரட்டிச் சென்றனர். வாதாபி நகரம் அதுபோது இரண்டாம் புலிகேசியின் ஆளுகையில் இருந்தது. அவனைப் பரஞ்சோதியார் வென்ருர். இக்குறிப்பே இப் பாட்டில் உள்ளது. இதனைச் சாளுக்கிய பட்டயங்களே குறித் துள்ளன. நின்ற சீர் நெடுமாற நாயனர் புராணத்துள், ஆயஅர சளிப்பார்பால் அமர்வேண்டி வந்தேற்ற சேயபுலத் தெவ்வர்எதிர் நெல்வேலிச் செருக்களத்தும் பாயபடைக் கடல்முடுகும் பரிமாவின் பெருவெள்ளம் காயமதக் களிற்றின் நிரை பரப்பிஅமர் கடக்கின்ருர் என்ற நெல்வேலிப் போர் குறிப்புக் காணப்படுகிறது. இரண்டாம் புலிகேசியின் மகன் முதலாம் விக்கிர மாதித்தன் என்னும் சாளுக்கியன். இவனே நெடுமாற நாயனருடன் போரிட்டவன். இறுதியில் தாய ளு ரே வென்முர். இதனைச் சேக்கிழார், 'பஞ்சவனர் படைக் குடைந்து முனை அழிந்த வடபுலத்து முதல் மன்னன் படை சரியப் புனையும் நறும் தொடைவாகை பூழியர் வேம்புடன் புனைந்து” என்று குறிப்பிட்டிள்ளனர். இப்போர் நடந்தது நெல்வேலி என்னும் இடமாகும். இதற்குச் சோழ மண்ட லத்துத் தென்கரைப் பனேயூர் நாட்டு நெல்வேலி என்று கல் வெட்டுக் குறிப்பிடும் சான்றும் உளது. நெடுமாறன் நெல்வேலியில் வெற்றி கொண்டதைக் சுந்தரரும், 'நிறைக்கொண்ட சிந்தையால், நெல்வேலி