பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638 சிற்றில் பருவம் ஒருலகோ ஒருதிசையோ ஒருபதியோ தம்மில் ஒருமரபோ ஒருபெயரோ ஒருகாலம் தானே பேருலகில் ஒருமைநெறி தருங்கதையோ பான்மைப் பெருங்கதையோ பேர்ஒன்ருே அல்லவே இதனை ஏருலகெ லாம்.உணர்ந்தோ தற்கரிய வன்என் (கொண்டு றிறைவன்முதல் அடிஎடுத்துக் கொடுத்தருளக் பாருலகில் நாமகள் நின் றெடுத்துக்கை நீட்டப் பாடிமுடித் தனர்.தொண்டர் சீர்பரவ வல்லார் என்றதும் காண்க. இத்தகைய காரணங்களால்தான் "புராணம் செய்தாருள் பொலியும் ஒருவன் என நவிலேம்' என்று சிறுமியர் செப்பினர். மூவர் ஆவார் அரி, அயன், அரன் என்பவர்கள். அரன் என்பவன் முழு முதற் பரம்பொருளாம் முக்கண் மூர்த்தி அல்லன். அரன் ஆவான் உருத்திரவைான். முக்கட்பரன் அரணில் வேருனவன் என்பதை மணிமொழியார் நன்கு விளக்கியுள்ளதைக் கீழ்வரும் திருவாசகப் பாடலில் சிந்தனை செலுத்தி உணர்தல் வேண்டும். - பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும் மாவேறு சோதியும் வானவரும் தாம்அறியாச் சேவேறு சேவடிக்கே சென்று தாய் கோத்தும்பீ என்ற பாடலைக் காண்க. இங்ங்னம் இருக்கப் பரசிவப் பொருளே மூவருள் ஒருவகைக் கருதலாமோ? கருதுகின்றவர்களேக் குறித்து இரக்கங்கொண்டே மணிமொழியார் மேற்கண்டவாறு ஒரு வாசகத்தை அருளியுள்ளனர். இவ்வுண்மை இங்ங்னம் இருக்க, இதனை உணராத நிலையில், - நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனத் தான்படைத்தான் என்று திருமழிசைஆழ்வாரும், அவர் தம் நூலுக்குத்தனியன் பாடிய சீராமப் பிள்ளை என்பவரும், இவரது கருத்தொட்டி,