பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் வரலாறும் காலமும் டுள தொண்டை நாட்டில் முதல் முதல் குடி ஏறிய வேளாளன் மரபில் வந்தவர்களே சேக்கிழார் குடியினர் எனப்படுவர். இச் சேக்கிழார் குடியினர்க்கு ஒர் ஆண் மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு அருண்மொழித் தேவர் என்ற பெயர் இட்டு வளர்த்தனர். அருண்மொழித் தேவர் என்பது இராசராச சோழன் பெயர்களுள் ஒன்று. இதல்ை வேளாளர்கட்கு அரசன் மாட்டுள்ள அன்பின நன்கு உணரலாம். சேக்கிழார் மரபினர்க்கு மற்றும் ஒர் ஆண் மகவு பிறந்தது. அது பாலருவாயர் என்ற பெயருடன் வளர்ந் தது. (இவ்விருவரின் பெற்ருேள்கள் வெள்ளியங்கிரி முதலி யார் என்றும் அழகாம்பிகை என்றும் கூறுவர்) சேக்கிழார் பெருமாளுர் பிறந்த இல்லமே இதுபோது அiரது பெயரால் கோவிலாக வேளாளர் வீதியில் துலங்குகிறது. அக்கோயில் அண்மையில், வித்துவான் மறை திருநாவுக்கரசின் அரும் பெரும் முயற்சியினல் பல அன்பர்களின் துணையில்ை நன் முறையில் கட்டப்பட்டு, அண்மையில் குடமுழுக்கு விழாவும் செய்யப்பட்டது. சந்நிதி வீதியில், அதாவது சேக்கிழார் கோவிலுக்கு வடவ்ண்டைக் கோடியில் சேக்கிழார் மடமும் ஒன்று உள்ளது. இவ்விரண்டையும் திரு பாலசுப்பிர முதலியார் என்பவர் நன்கு கண்காணித்து வருகின்றனர். சேக்கிழார் பிறந்து அறிவு வளர்ந்து இறை அன்பு மேலிட்டிருந்த நிலையில் சோழ நாட்டுத் திருப்பதிகளில் ஒன்ருன திருநாகேச்சுரம் என்ற தலத்தினிடத்தில் மிகுந்த பற்றுக்கொண்டு விளங்கினர். அதன் அறிகுறியாகத் திரு நாகேச்சுரம் என்ற திருப்பெயரால் தம் ஊருக்கு அருகே ஈசான மூலையில் ஒர் ஆலயம் கண்டு இலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு, அத்தலத்திற்குத் திருநாகேச்சுரம் என்ற பெயரையும் சூட்டி வணங்கி வந்தனர். அவ்வாலயம் இருக்கும் இடம் அவ்வாலயத் திருப்பெயரால் திருநாகேச்சுரம் என்ற பெயரால் இன்றும் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாலயம் இதுபோது செங்குந்த முதலியார் ம்ாபினர் கைவசமாகிச்