பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/759

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபறைப் பருவம் გუ7 மல பரிவாகம் ஏற்பட, அதனல் சத்தினிபாதம் உண்டாக, அதனல் தீவிரதர நிலையினே அடைந்தவர்க்கு இறைவன் குருவாக வந்து ஞான உபதேசம் செய்ய, அதனைக் கேட்டவர் சிந்தித்து, தெளிந்து, நிட்டை கூடிப் பாசத்தை ஒழித்துச் சிவத்துடன் அத்துவிதமாகிச் சாயுச்சி நிலையை உற்றுச் சிவானுபோகத்தில் திளைப்பர் என்பதாம். ஆகவே, எய்துதற் கரிய 'சிவானுபோகம்' என்றனர். இப்பாட்டின் ஈற்றுப்பகுதி நிலவள மாண்பைப் புகழு கிறது. பாக்கு மரங்களில் தேன் கூடுகள் நிரம்பி இருந்தன. அப்பாக்கு மரங்கள் நீர்வளத்தால் மிக உயர்ந்து ஆகாயம் அளாவி வளர்ந்தன. அதனல் பிறைச் சந்திரனது கோடு பாக்கு மரத்தில் இருந்த தேன் கூடுகளில் பட்டு அவை உடைந்தன. உடைந்ததல்ை தேன் ஊற்றெடுத்தது. ஊற்றெடுத்துக் குளம், ஒடை, கிணறு இவற்றை நிரப்பியது. சந்திரன் தேன் கூட்டைக் கீண்டதற்குக் காரணம், சந்திரன், தேன் கூட்டைச் (அது சிவந்து காணப்பட்டதால்) சூரியன் என்று மயங்கி அச்சூரியன் தன்னைக் கவர வருகிருன் என்று எண்ணிக் கீறியதாகும். ஆகவே, ஈண்டு மயக்க அணியும், ஏதுதற்குறிப்பு ஏற்ற அணியும் அமைந்திருத்தல் கீாண்க. (85)