பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/768

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

686 சிறுபறைப் பருவம் வெள்வீத் தாழை திரைஅலை நள்என் கங்குலும் கேட்கும் நின் குரலே என்று இயம்புகிறது. கடலில் அமுதம் தோன்றியது என்ற புராண வரலாறு இருத்தலின், கடல் அமுதம் என்றனர். குழல் இனிது, யாழ் இனிது என்று வள்ளுவர் அறிவித்தலின் 'அவாங் குழல், வீணை" என்றனர். ஆவின் பால், தேன், சர்க்கரை, கற்கண்டு, பலா, மா, வாழைக் கனிகள், முந்திரிப்பழம், தேவாமுதம், குழல் இசை, வீணேயின் இசை ஆகிய இவற்றின் சுவைகள் எல்லாம் கலந்த போது அச்சுவை எவ்வாறு இனிக்குமோ அவ்வாறு இனிக்கும் கவிகளை ப் பாடியவர் சேக்கிழார் என்பதைப் பிள்ளையவர்கள் இங்குக் குறிப்பிட்டுள்ளனர். சுவ்ையின் மிகுதியினை மிகுதிப் படுத்த இவ்வாறு சுவைமிக்க பொருள்களைக் கூட்டி உரைத்தல் அன்பு முதிர்ந்த பெரும் புலவர்களிடத்தில் உண்டு. இராமலிங்க சுவாமிகளும் இறைவனது இன்பச் சுவையினே இயம்பும்போது, தனித்தனிமுக் கணிபிழிந்து வடித்துஒன்ருக் கூட்டிச் சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே தனித்தநறும் தேன் பெய்து பசும்பாலும் தெங்கின் தனிப்பாலும் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி இனித்த நறு நெய்அளேந்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடும்தெள் அமுதே அணித்தம்அறத் திருப்பொதுவில் விளங்கு நடத் தரசே அடிமலர்க்கென் சொல்அணியாம் அலங்கல்அணிந் தருளே என்று இனிது பாடியிருத்தலை உணரலாம். கனியி னும்கட்டி பட்ட கரும்பினும் பனிம லர்க்குழல் பாவைநல் லாரினும் தனிமு டிகவித் தாளும் அரசினும் இனியன் தன் அடைந் தார்க்கிடை மருதனே’’ என்ற அப்பரது அரும்பாடலையும் நினைவு கூர்தல் நலமாகும்.