பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/769

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபறைப் பருவம் 68? அப்பர் பர்ட்டில் அமைந்த உவமையின் வழி அரிய கருத்துப் புலப்படிகிறது. அதாவது, இங்குக் குறிப்பிடப்பட்ட பொருள்கள் குழந்தை, இளைஞர், குமரர், முதியர் ஆகிய நால்வர்க்கும் இறைவன் தனித்தனி இன்பம் பயப்பவன் என்பது. இதுபோலச் சேக்கிழாரது கவிகள், பசுப்பால், தேன் கருக்கரை, கற்கண்டு. பலா, மா, வாழை, திராட்சை, தேவா முதம் போல இனிக்கும் என்ற தளுல் வாய்க்கும், குழல், வீணே இசைபோலச் சுவைக்கும் என்ற தல்ை காதிற்கும், சிவமணம் கமழும் என்ற தல்ை மூக்கிற்கும் இன்பம் தரும் என்ற அசிய கருத்தும் அடங்கியுள்ளது. வாய், செவி, மூக்கிற்கும் இன்பம் தரும் முறையில் சேக்கிழார் கவிகள் அமைந்துள்ளனவே அன்றி, மெய்க்கும் கண்ணிற்கும் சுவை பயக்கும் முறையில் அமைந்திவவே என்று ஐயுறலாம். அங்கனம் ஐயுறுதற்கு இடமே இல்லை. பெரிய புராணக் கவிகளைத் தொட்டாலும் இன்பம் உண்டு, கண்ணுல் பாத்தாலும் இன்பம் உண்டு. இவ் வாறு கவிகள் தொட்டாலும், கண்டாலும் சுவைக்கும் என்ற உண்மையினைத் தனிப்பாடல் திரட்டில் வரும், மட்டாரும் தென்களந்தைப் படிக்காசன் உரைத்த தமிழ் வரைந்த ஏட்டைப் பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகும் பரிமளிக்கும் பரிந்த ஏட்டைத் தொட்டாலும் கைம்மனக்கும் சொன்னலும் வாய்மணக்கும் துய்ய சேற்றில் நட்டாலும் தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே பாட்டினது நளினம் தானே என்ற பாடலால் அறியலாம். மேலும், சிவஞான முனிவர் பெரிய புராணத்தைத் தம் படுக்கையில் வலப்பக்கத்தே வைத்துப் படுத்துறங்குவர் என்று ஆன்ருேர் கூறும் வழக் கையும் ஈண்டு நினைவுபடுத்திக் கொள்வோமாக. சேக்கிழாரது கவிகள் மேலே காட்டிய சுவை போல இனிக்கும் என்பதைப் பெரிய புராணத்துத் தொட்ட தொட்ட இடங்களில் காணலாம். சில உதாரணங்களை மட்டும் ஈண்டுக் காட்டி மேலே செல்வோம்.