பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/770

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

688 சிறுப்றைப் பருவம் துாயவெண் ணிறுதுதைந்தபொன் மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்துருகிப் பாய்வதுபோல் அன்புநீர் பொழிகண்ணும் பதிகச்செந் சொல் மேயசெவ் வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே என்ற பாடலின் சுவையையும் இனிமையையும் துய்க்கவும். இதேபோல, மார்பாரப் பொழிகண்ணிர் மழைவாரும் திருவடிவும் மதுர வாக்கில் சேர்வாரும் திருவாயில் தீந்தமிழின் மாலைகளும் செம்பொன் தாளே சார்வான திருமணமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப் பார்வாழத் திருவீதிப் பணிசெய்து பணிந்தேத்திப் பரவிச் செல்வார் என்றபாடலில் அமைந்த இனிமையையும் படித்து இன்புறுக. இன்னுேரன்ன இனிய சுவை மிக்க பாடல்களின் சுவையை அறிந்தே காஞ்சி புராண ஆசிரியர், இடையருப் பேரன்பும் மழைவாரும் இணைவிழியும் உழவாரத்திண் படையருத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சும் நடையருப் பெருந்துறவும் வாகீசப் பெருந்தகைதன் ஞானப் பாடல் தொடையருச் செவ்வாயும் சிவவேடப் பொலிவழகும் துதித்து வாழ்வாம் என்றும், உறையூர்ப் புராண ஆசிரியர். கந்தை மிகை யாம்கருத்தும் கையுழவாரப் படையும் கவின்வெண் ணிறும் சிந்தையிடை அரு.அன்பும் சிவஞானம் பழுத்தொழுரு செய்ய வாயும்