பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/771

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபறைப் பருவம் 689 தந்தையொடு தாயிலான் திருவடிதை வருமணமும் தாரைக் கண்ணும் நிந்தைஅறு முழுத்துறவும் உடையபிரான் அடிபணிந்து நீடு வாழ்வாம் என்று பாடிச் சேக்கிழார் கவிச் சுவையை நுகர்ந்தனர். சேக்கிழார் பாடல்களில் சிவமணமே கமழும். சிற்றின்பக் காதல் வழியும் சிவமணமே கமழும் பாடல்கள் அவரால் பாடப்பட்டன எனில், சேக்கிழாரது பாடல்களின் சிவமணம் கமழும் எனக் கூறவும் வேண்டுமோ? கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோபுயல்சுமந்து விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ அற்புதமோ சிவனருளோ அறியேன் என் றதிசயித்தார் முன்னே வந் தெதிர்தோன்றும் முருகனே பெருகொளியால் தன்னேரில் மாரனே தார்மார்பில் விஞ்சையனே மின்ளேர்செஞ் சடைஅண்ணல் மெய்யருள் பெற் றுடையவனுே என்னே என் மனம்திரித்த இவன் யாரோ என நினைந்தார் என்ற இடத்துச் சுந்தரர் பரவையார் சந்திப்பில் சிவமணம் கமழும்படி பாடியதைக் காண்க. பரவையா ரைத் தேடிய சுந்தரர், 'அவ்வம்மையாரை, 'ஈசனர் அருள் எந்நெறிச் சென்றதே எம்பிரான் அருள் எந்நெறிச் சென்றதே, 'எந்தையார் அருள் எவ்வழிச் சென்றதே" என்று கூறி வருந்தியதாகப் பாடி இருப்பது கொண்டும், இவ்வாறே பரவையார் சுந்தரரை எண்ணி வருந்தியபோது, 'அந்தண்புனலும் அரவும் விரவும் உடை யான் அருள் பெற்றுடையார்' 'அலரும் நிலவும் மலரும் முடியார் அருள்பெற்றுடையார்' என்று சுந்தரரைக் குறித்துப் பாடி இருப்பது கொண்டும் சிவமணம் கமழப் பாடல்கள் திகழ்வதைக் காணலாம். சுந்தரர் பரவையரது இன்பத்தை இனிது நுகர்ந்த போதும், இறையடி மறவாதவர் என்று பாடிக் காட்டி இருப்பதும் சிவமணம் கமழும் பாடல்தானே, 44