பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/797

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபறைப் பருவம் 715 பரிவாய்இன் மொழிதொடுத்து வருணித்தோர்க்கு அகம்மகிழ்ந்தோர் பயனும் நல்கா விரிவாய தடங்கடலே நெடுங்கழியே அடுங்கான விலங்கே புள்ளே பொரிவாய பராரைமர நிரையேவான் தொடுகுடுமிப் பொருப்பே வெம்புப் எரிவாய கொடுஞ்சுரமே என இவற்ருேர் அஃறிணையொத் திருந்தான் எந்தாய் என்னை இகழ்ந் தனனேசொல் வடிவாய்நின் இடம்பிரியா இம்யப் பாவை தன்னையும்சொல் பொருளான உன்னையுமே இகழ்ந்தனனென் றனக்கியா தென்னு முன்னேமொழிந் திடைக்காடன் தணியாத முனிவீர்ப்ப முந்திச் சென்ருன் அன்னவுரை திருச்செவியின் ஊறுபா டென உறைப்ப அருளின் மூர்த்தி இடைக்காடர் பின் சென்று வைகையின் தென்கரையில் உமையுடன் வீற்றிருக்கலானர். திருமழிசை ஆழ்வார் தமது மாணவன் கணிகண்ண னுடன் காஞ்சியில் இருந்தபோது, அரசாண்ட மன்னன், கணிகண்ணனிடம் தன் மீது பாட்டுப் பாடவேண்டும் என வேண்டினன். அது செய்ய மறுத்த கணிகண்ணனேத் தன்னுட்டில் இருத்தல் கூடாது எனக் கட்டளேப் பிறப்பிக்க, அதனைத் தன் ஆசிரியரிடம் கூற, அவர் நீ இங்கு இருக்கக் கூடாது என்ரு ல் நான் மட்டும் இங்கு இருக்கலாமா? பெருமாளும் இங்கு இருக்கலாமா என்று கூறி எழுந்து பெருமாளிடம் சென்று, 'கணிகண்ணன் போகின்ருன் காமரும்பூங் கச்சி மணிவண் ணு நீகிடக்க வேண்டா-துணிவுடையை செந்நாப் புலவன் யான் செல்கின்றேன் நீயும் உன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்' என்று பாடியதும் பெருமாளும் தன் பிராட்டியுடன் அவர் பின் சென்ருர் என்றும் கூறப்படுகிறது. இதனேக் குமர