பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/800

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

718 சிறுபறைப் பருவம் நிழல் கூறிய, பொருளின் ஆகும் எனப்பு:கல்வாம்” என்பது சேக்கிழார் வாக்கு. இறைவன் சிலம்பொலி செய்து காட்டல் சிறப்புடைய நிகழ்ச்சியின் போதே ஆகும். இந்த உண்மை கழறிற்றறிவார் நாயனர் புராணத்துள் நன்கு உணரலாம். சேரமான் பெருமாள் நாயனர் தில்லைக் கூத்தப் பெரு மானேப்பூசித்து நிற்கையில் பூசையினே'இறைவன் ஏற்றதற்கு அறிகுறியாகச் சிலம்பொலியின எழுப்பிக் காட்டுவர். ஒரு நாள் சேரர் பெருமாளுர் கூத்தப்பெருமானது சிலம்போசை யினைக், கேளாத நிலையில் அவர் இறைவனிடம், 'இன்று பூசை முடிவில் சிலம்போசையினே அடியேன் கேளாத நிலையில் யான் செய்த தவறு என்னையோ?” என்று வினவித் தம் பூசையில் பிழை இருத்தல் வேண்டும். ஆதலின் ஒசையினைக் காட்டிலர் என்று உடைவாள் கொண்டு உயிரின மாய்த்துக்கொள்ள முயன்றபோது, இறைவர் உடனே சிலம்போசையினை எழுப்பினர். இதனைச் சேக்கிழார், பூசை கடிதுமுடித்து அடியேன் என்னே பிழைத்தது எனப்பொருமி ஆசை உடம்பால் மற்றினிவே றடையும் இன்பம்யா தென்று தேசின் விளங்கும் உடைவாளே உருவித் திருமார் பினில் நாட்ட ஈசர் விரைந்து திருச்சிலம்பின் ஒசை மிகவும் இசைப்பித்தார் என்று சிலம்போசை எழுந்ததைக் குறிப்பிட்டதைக் காணவும். தொண்டர் நாதனைத் துரதிடை விடுத்ததும் முதலே உண்ட பாலனே அழைத்ததும் எலும்புபெண் உருவாக் கண்ட தும்மறைக் கதவினத் திறந்ததும் கன்னித் தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் செர்ற்களோ சாற்றீர்