பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/802

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. சிறுதேர்ப்பருவம் 1. மருவாய் நறுந்தா தகித்தொங்கல் வளவர்கோ மகனுடன் இவர்ந் திருகையும் மணிக்கவரி வாங்கிவி சக்கற்ப கப்பூ மகிழ்ந்துவ னுடர் துாற்றப் பெருவாய் திறந்துபட் கம்பேரி முதலாம் பெரும்பணை எலாம் முழங்கப் பிறங்குமூ வாயிரவர் முதலியோர் மறையொலி பிறங்கத் தொடர்ந்து போதக் கருவாய் உருமற்றை யாரும் தலைக்குமேல் கைகுவித் தேத்தி மேவக் கருதும் புராணமுடி வில் குஞ் சரத்தில கடித்திவர்ந் தோங்கு தில்லைத் தெருவாய் உலாப்போது சேவையர் குலாதிபன் சிறுதேர் உருட்டி அருளே சிறுகோல் எடுத்தரசு செங்கோல் நிறுத்தினுேன் சிறுதேர் உருட்டி யருளே (அ. சொ.) : மருவாய்-வாசனேயுடையதாய், நறுந் தாதகி-நல்ல ஆத்தி மலர், தொங்கல்-மாலை, வளவர் கோமகன்-சோழமன்னன் அநபாயச்சோழன், இவர்ந்து-ஏறி மணி-அழகிய, கவரி-வெண்சாமரை, வாடைர்-தேவர்கள் பேரி-வாத்திய வகைகள் பணே-வாத்தியங்கள், பிறங்குவிளங்கு, மூவாயிரவர் - மூவாயிரம் தி ல் லே வாழ் அந்தணர், மறை-வேதம், பிறங்க-விளங்க, போத-வர, கருவாய்-தாயின் கருப்பத்தில், உரு-சேராத, ஏத்தி-போற்றி மேவ-உடன்வர. குஞ்சரத்து யானைமீது. இலகடம்-யான அம்பாரி, உலா-வீதி வலம், இவர்ந்து-ஏறி அமர்ந்து, சிறு