பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/814

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

732 சிறுதேர்ப் பருவம் நண்ணு மன்னுயிர் யாவையும் பல்க நாடு காதலின் நீடிய வாழ்க்கைப் பூண்ணி யத்திருக் காமக்கோட் டத்துப் பொலிய ழுப்பதோ டிரண்டறம் புரக்கு என்றும் குறிப்பிட்டிருப்பதைக் காண்க. இறைவி ஒருத்தியே மாதேவி. இவளது இரு கண்களே இலக்குமியும் சரசுவதியும் எனில், வேறு கூறவேண்டா அன்றே? இதனைத் திருவிளையாடல் புராணம், திருமகள் வலக்கண் வாக்கின் சேய்இழை இடக்கண் ஞானம் பெருமகள் நுதற்கண் ஆகப் பெற்றுவான் செல்வம் கல்வி அருமைவி டளிப்பாள் யாவள் அவள் உயிர்த் துணைவன் காண ஒருமுலை மறைந்து நாணி ஒசிந்துபூங் கொம்பில் நின்ருள் என்றும், சிவப்பிரகாசர், தண்ணுர்இதழி புனைவான் விழிஇணை தம்மனைகள் பண்ணு அழிக்கும்என் ருேநின் திருமுகப் பங்கயத்தில் கண்ணு யினருனக் கவ்வலை மாதும் கலைமகளும் பெண்ணுர் அமுதனே யாய்குன்றை வாழும் பெரியம்மையே என்றும் போற்றியுள்ளனர். ஆக இறைவி மாதேவி என்பது சரதமாம் அன்ருே? இறைவிக்குக் காமாட்சி என்னும் திருப்பெயர் அமைந்த தற்கு அவள் 'கா'வாகிய சுரஸ்வதியையும், 'மா' என்னும் இலக்குமியையும் அட்சிகளாகக் (கண்களாக) கொண்டிருப்ப தளுல்தான் என்பதைக் காஞ்சிப்புராணம், வேறுஒன் ருங்கண் காஎனப் படுவாள் வெண்மல ராட்டிமா என்பாள் ஊறுதேம் கமலப் பொகுட்டணை அணங்காம் ஊங்குவர் இருவரும் முகிலே