பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/819

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுதேர்ப் பருவம் 737 விளக்கம்: அனபாயனது ஆட்சிக் காலத்தில் போர் நிகழ்ச்சியினைப்பற்றிப் பெரிதும் அறியப்படலில்லை. நாடு அமைதி நிலேவியதாகத் தெரிகிறது. இதற்குக் காரணம் இவனிடத்துள்ள போர் வன்மை என்பது புலகிைறது. இதல்ை பகை அரசர்கள் அஞ்சி இவனுக்கு அடங்கி இருந் திருக்க வேண்டும். இவனது சினத்தை 'அழல் அரும்புகண்' என்ற தொடரில் ஆசிரியர் புலப்படுத்தியுள்ளனர். இவன் சினம் கொண்டால் பகைக் கடல் சுவறிவிடும்; அஃது அஞ்சி நடுங்கிவிடும். ஆகவே, பகைவர் அஞ்சி ஒடுங்கி இருந்தனர். இதனால் இவனது ஆட்சி அமைதியான ஆட்சி என்பதை உணர்கிருேம். என்ருலும், அரசர்கட்கு இருக்க வேண்டிய ஆண்மைச் சினம் உடையவன் இம்மன்னன் என் பதை நினைவூட்டவே முதலடியினே அமைத்தனர் திரு. பிள்ளை அவர்கள். சோழர்கட்கு ஆத்திமாலே உண்டு என்பதைத் தொல்காப்பிய இலக்கண வாயிலாக முன்பே கூறப்பட்டது. இறைவனுக்கும் இம்மாலை உரியது. இதனே, 'ஆத்திசூடி அமர்ந்த தேவனே ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே” என்ற தளுல் அறியலாம். சோழர்கள் பகைவர்களை எதிர்க்கையில் ஆத்தி மாலை அணிந்துகொள்வர் என்பதைப் புறப்பொருள் வெண்பா மாலையும், 'விரல்படை மறவர் வெஞ்சமம் காணின், மறப்போர்ச் செம்பியன் மலைபூ உரைத்தன்று' என்றனர். மேலும், கொல்களிறு ஊர்வர் கொலைமலிவாள்மறவர் வெல்கழல் வீக்குவர் வேல்இளேயர்-மல்கும் கலங்கல் ஒலிபுனல் காவிரி நாடன் அலங்கல் அமர்அழுவத்து ஆர் என்று, சோழ மன்னர்களும், அவர்கள் தம் வீரர்களும் ஆத்தி புனேதலேக் கூறினர். ஆகச் சோழ மன்னர் அடையாள 47