பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/828

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 46 சிறுதேர்ப் பருவம் மாலை, வாகை-வெற்றிமாலை, ஆர்-ஆத்திமாலை, எய்தபொருத்த, புனைந்த-தரித்த, பெருமான்-சோழ மன்னன்' இரும்புலி-பெரிய புலிக்கொடியை, முடி-உச்சி, இணங்குறபொருந்த, நேமி-ஆக்ஞா சக்கரம், பல்லாறு-பல ஆறு, விளக்கம்: அமைச்சனுக்கு இருக்கவேண்டிய பண்பு களான சொல் வன்மை, வினைத்துாய்மை, வினை செயல்வகை முதலானவற்றுள் வினைத்திட்பம் என்பதும் ஒன்று. பரி மேலழகர் வினைத் திட்பத்தை விளக்கும்போது 'துரயவினை முடிப்பானுக்கு வேண்டுவதாய மனத்திண்மை’ என்றனர். மணக்குடவர், 'வினேயின் கண் திண்ணியர் ஆதல்’ என்றனர். பரிதியார், 'காரியத்தில்ைதிடம் பெற்று நிற்றல்' என்றனர். இப்பண்பைப்பற்றி வள்ளுவர் கூறும்போது, 'வினைத் திட்டம் என்பது ஒருவனது மனத்திட்பம்’ என்றே கூறினர். இந்த வினைத் திட்பத்தினை எல்லாரும் மதிப்பர் என்றே வள்ளுவர் கூறுவர். 'வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் உள்ளப்படும்” என்று அவர் கூறியதைக் காண்க. அமைச்சனிடம் வினைத்திட்பம் இல்லாமல் ஏனைய திட்பங்கள் இருப்பினும், அவற்றை ஒரு பொருட்டாக உலகம் மதியாது என்றும் வள்ளுவர் மொழிந்துள்ளனர். இதனை அவர், எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டா துலகு என்று குறித்துள்ளார். இஃது இத்தகைய பண்பு ஆதலினால், இதனை வசைதவிர் வினைத்திட்பம் என்றனர் திரு. பிள்ளை அவர்கள். இப் பண்பினைச் சேக்கிழார் பெற்றிருந்தனர் என்பதை இப் பாட்டு நமக்கு அறிவிக்கும் குறிப்பாகும். யானையின் மத மிகுதியினைக் காட்ட மழையினை அடை ஆக்கினர். ஈண்டு, யானை, குதிரை, தேர்ச் சேனைகளைக் குறிப்பிட்டுக் காலாட புடையினைக் குறிப்பிடாத காரணம் மற்றுள வருதினி என்