பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/843

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுதேர்ப் பருவம் ግ81 என்று குறளும், 'தெள்ளிதின் ஆரர்ய்ந்து அமைவுடைய கற்பவே', என்று நாலடியும், கற்ருங்கறிந்து அடங்கி என்று நீதி நெறி விளக்கமும். பையவே கற்றுக் கற்ற பண்பின ரோடு நாளும் உய்யவே அளவளாவி உரைத்தவா நிற்றல்வேண்டும் என்று விநாயக புராணமும் கூறுதல் காண்க. கற்றலின் பயன் நிற்றல். அவ்வாறு நிற்கவில்லை எனில் இழிவு என்ப தைப் பிரபு லிங்கலீலை, 'சொல்லிய சொற்கள் கற்றீர் சொற்ற அந் நெறியில் நிற்கும் நல்லியல் இல்லே' என்று இடித்துரைக்கிறது. இவ்வாறு நிற்கும் பண்பே துண் அறிவுடைமை ஆகும். அறிவுடைமையைப்பற்றி விளக்க வந்த பரிமேலழகர், 'கல்வி கேள்விகளினுய அறிவோடு உண்மை அறிவுடையன் ஆதல்' என்பர். மனக்குடவர், 'அறிவுடைமையாவது அறிவாவது இன்னது என்பதும், அதனல் ஆகிய பயனும் கூறுதல். இது கல்வியும் கேள்வியும் உடையராயினும் கேட்ட பொருளே உள்ளவாறு உணர்ந் தறிதல் வேண்டும்' என்றனர். நாலடியார் நுண்ணறிவுடைமையினைத்தான் செல் வம் என்கிறது. 'நுண்ணுணர்வின்மை வறுமை, அஃதுடை மை பண்ணப்படைத்த பெருஞ் செல்வம்” என்ற அடிகளில் இக் கருத்தைக் காண்க. பழமொழி தானுாற்றிலும் துண் னறிவின் மாட்சியினை, அறிவினுல் மாட்சிஒன் றில்லா ஒருவன் பிறிதினுல் மாண்ட தெவனும்-பொறியின் மணிபொன்னும் சாந்தமும் மாலேயும் இன்ன அணிலெல்லாம் ஆடையின் பின் என்று பேசுகிறது. நுண்ணறிவுதான் இறுதிவரையில் காக்கும் கருவியாகும். மனத்தைச் சென்ற சென்ற இடங்கள் எல்லாம் செல்ல