பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பாயிரம் ராசப் பெருமான் நடனம் புரியும் சபை, இறைவர்-நடரா சர், மேனி-அசரீரி, இணங்கு-பொருத்தம், உற-பொருந்த, மறை-வேதவாக்கியம், ஆதியா-முதலா, அருளும் இயல்பு-திரு வருள் திறம், நாம்-பெருமை, அம்முதல் இறைவர் எடுத்துக் கொடுத்த உலகெலாம் என்னும் அம்முதல், நெறி-வழி, வான்-ஆகாயம், வாய்க்கடைகடைவாய், மருப்பு-யானேத் தந்தம், பாமேவு-பரவி இருக்கின்ற, சிறப்பித்துக் கூறப் படுகின்ற, உதரபந்தம்-வயிற்றில் கட்டப்பட்ட பட்டை, அரை-இடை, படாம்-ஆடை, கழல்-வீரத் தண்டை, விரவகலந்து பொருந்த, பண்ணவனே-விநாயகளும் தேவனே, அஞ்சலிப்பாம்-கைகூப்பித் தொழுவாம். (விளக்கம்): ஏமம் என்னும் சொல் ஏம் என கடைக் குறைந்து நின்றது. தில்லேக் கூத்தப்பெருமான் நடன சபை பொன்ளுேடு வேய்ந்திருக்கும் காரணத்தால், 'ஏம்மேவு ஞானசபை' எனப்பட்டது. - எந்நூல் செய்யினும் அந்நூற்குப் பாயிரம் அமை வேண்டுவது மரபு. இதனை உச்சிமேற் புலவர்கொள் நச்சி ஞர்க் கினியர், 'எந்நூல் உரைப்பினும், அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்க என்பது இலக்கணம், என்ன? ஆயிரம் முகத்தால் அகன்ற தாயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே என்ருர் ஆதலின்' என்று கூறி யுள்ளனர். இந்த அளவிலும் அவர் நிறுத்திலர். பாயிரத்தின் இன்றி அமையாமையினே,

  • பாயிரம் என்றது, புறவுரையை. நூல் கேட்கின்ருன் புறவுரை கேட்கில் கொழுச்சென்றவழித் துன் ஊசி இனிது செல்லுமாறு போல, அந்நூல் இனிது விளங்குதலின் புற வுரை கேட்டல் வேண்டும்: என்ன?

பருப்பொருட் டாகிய பாயிரம் கேட்டார்க்கு நுண்பொருட் டாகிய துால்இனிது விளங்கும்.' என்ருர்.