பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/862

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

780 சிறுதேர்ப் பருவம் சைவ சமயப் பெரியவர்கள் தோன்றும் காலத்து அகச் சமயத்தவர்கட்கு ஆனந்தமும், புறத் சமயத்தவர்கட்குத் துன்பமும் ஏற்படுதல் இயல்பு. இதனை நமது சேக்கிழார் திருஞான சம்பந்தர் புராணத்துள் நன்கு எடுத்து விளக்கி யுள்ளனர். அருக்கன்முதல் கோள்.அனைத்தும் அழகிய உச்சங்களிலே பெருக்கவலி யுடன் நிற்கப் பேணியநல் ஒரைஎழத் திருக்கிளரும் ஆதிரைநாள் தினசவிளங்கப் பரசமயத் தருக்கொழியச் சைவமுதல் வைதிகமும் தழைத்தோங்க தொண்டர்மனம் களிசிறப்பத் தூய திரு நீற்றுநெறி எண்திசையும் தனிநடப்ப ஏழுலகும் குளிர்துங்க அண்டர்குலம் அதிசயிப்ப அந்தணர்ஆ குதிபெருக வண்தமிழ்செய் தவம் நிரம்ப மாதவத்தோர் செயல்வாய்ப்ப, திசை.அனைத்தின் பெருமைஎலாம் தென்திசையே வென்றேற மிசை உலகும் பிற உலகும் மேதினியே தனிவெல்ல அசைவில்செழும் தமிழ்வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல இசைமுழுதும் மெய்அறிவும் இடங்கொள்ளும் நிலைபெருக அவம்பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமயம் பவம்பெருக்கும் புரைநெறிகள் பாழ்படநல் ஊழிதொறும்