பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/875

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுதேர்ப் பருவம் 793 சிவை என்பதற்குத் திருவருள் சத்தி என்ற பொருளும் உண்டு 'அருளது சத்தியாகும்' என்று வருதல் காண்க. அத் திருவருள் சத்தி 'உலகெலாம்' என்ற சொல்லைக் கொடுக்கப் பெற்ற சேவையர் குலாதிபன் எனச் சேக்கிழார்மீது ஏற்றிக் கூறினும் அமையும். (100) 10. பண்புகெழு நின்சரித் திரம் இனிய பாவால் பரப்பிய திருக்கை லாய பரம்பரை உமாபதி சிவன்புகழும், அவன்முனுேர் பைம்புகழும் அவன் வழிவரும் நண்புபுனே தவர்புகழும் இனிமேலும் வருபவர் நயப்புகழும் நீடு வாழ நாடுவித cசெய்த மரபுரா ணத்தமரும் நாயன்மார் பெருமை வாழ விண்புகழும் நால்வர்திரு வாய்மலர்ந் தருள்திரா விட்வேதம் என்றும் வாழ மெய்யன் பின் நின்ஆ லயப்பணி முதல்புரி விருப்பம்மிக் கார்கள் வாழத் திண் புவி எடுத்தேத்து சேவையர் குலாதிபன் சிறுதேர் உருட்டி யருளே சிறுகோல் எடுத்தரசு செங்கோல் நிறுத்தினுேன் சிறுதேர் உருட்டி யருளே. (அ. சொ.) பண்பு-நற்குண நற்செய்கை, கெழுமிக்கு, முனேர்-முன்னேர்கள், பைம் புகழ்-என்றும் அழியாத புகழ், நால்வர்-அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், திராவிட வேதம்-தமிழ் வேதமாகிய தேவாமி திருவாசகம், பணி - தொண்டு, புவி - பூமியில் உள்ள மக்கள், ஏத்தும் - போற்றும், மா புராணம் - பெரிய புராணம், நாயன்மார்-அறுபான், மும்மை நாயன்மார்களும் தொகையடியார்களும்.