பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii முன்னுரை விளக்கமும், சேக்கிழார் பிள்ளைத் தமிழ் ஆசிரியரான திரு. பிள்ளே அவர்களின் வாழ்க்கை வரலாறும் இணைக்கப்பட் டுள்ளன. ஈற்றில், இந்நூலில் கூறப்பட்டுள்ள விசேடச் செய்திகளைப் பற்றிய அகராதியும், எடுத்தாண்டுள்ள நூல் களின் பட்டியலும், மற்றும் பலவும் எழுதிச் சேர்த்திருப்பது, இவ்விளக்க உரையினை அவாவிப் படிப்போர்க்குப் பொன் மலர் நாற்றம் உற்ருல் போன்ற சிறப்பை அளிக்கும் என்பது எனது நம்பிக்கையான உள்ளக் கிடக்கையாகும். இத்தகைய அரிய பெரிய தொண்டினைச் செய்தற்குரிய அறிவையும் ஆற்றலையும் அளித்த நமது தெய்வப் புலவர் சேக்கிழார் பெருமாளுரின் திருவடித் தாமர்ைகளை உள்ளத்தில் கொண்டு வணங்கிப் போற்றுகின்றேன். இவ் உரைவிளக்கம், 'உரைப்போன் உள்ளக் கருத்தின் அளவே பெருக்கம்' என்பது போலப் பெரிதும் வளர்ந்து விட்டது. இவ்வளவு பெரிய உரையினை அச்சிட்டு வெளி யிடுவோர் யார்? என்ற ஏக்கம் என் உள்ளத்தில் எழுந்தது. இதனச் சென்னை அறநிலைய ஆட்சித் துறைத் துணை ஆணேயாளர் உயர்திருவாளர் D. ராமலிங்க ரெட்டி யார் M.A.,B.L. அவர்களிடம் அறிவித்துக் கொண்டனன். அவர்கள் கருணை கூர்ந்து, தாம் ஒரு தேவத்தானம் மூலம் வெளியிட ஏற்பாடு செய்வதாகக் கூறித் திருப்போரூர்க் கந்தப்பெருமான் தேவத் தானப் பரம்பரைத் தர்மகர்த்தத் துவம் சிவத் திரு. சிவப்பிரகாச அடிகளார் அவர்களிடம் எனது உரைநூலைப்பற்றிக் கூறினர்கள். அவர்களும் உடனே உளம் உவந்து திருப்போரூர்த் தேவத்தான வெளியீடாக வெளியிட முன் வந்தனர். இவ்விருவர்கட்கு யான் யாது கைம் மாறு செய்யவல்லேன்? எனது உளம் கலந்த நன்றி அறித லான வணக்கத்தை அறிவித்துக் கொள்வதே அன்றி வேறு அறியேன். - இவ்வாறு இவ்வுரைநூலே எழுதியுள்ளேன் என்றும், இதனைத் திருப்போரூர்த் தேவத் தானம் வெளியிட முன்வந் து ளது என்றும் அறநிலைய ஆட்சித் துறை ஆணையாளர் உயர் திருவாளர் எம். எஸ். சாரங்கபாணி முதலியார் B.A.,B.L.