பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii களான சேதுபதிகளது விசால மனப்பான்மையையும், சமுதாய உணர்வுகளையும் புரிந்து போற்ற வேண்டும் என்பது எனது அவா. இங்ங்னம் செய்தல் தமிழ்ச் சமுதாயத்தின் தன்னிலை விளக்கமாக அமைவதுடன், தமிழக வரலாற்றின் ஒளிபடராத எடுகளில் அமைந்துள்ள உயர்ந்த படிப்பினைகளையும் புரிந்து கொள்ள உதவுவதாகும். செந்தமிழ்ச் சேது மன்னர்களது கொடை ஆவணங்களது தொகுப்பாக வெளியிடப்படும் இந்த முதல் நூலினை ஆய்வாளர் களும், அறிஞர் பெருமக்களும் அன்புடன் வரவேற்று உதவுவார் கள் என எண்ணுகிறேன். திசம்பர் : 1992 எஸ். எம். கமால் இராமநாதபுரம் நூலாசிரியர்