பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 OO எஸ். எம் . கமால் -- -- - அமைந்துள்ளது. முடித்தனாவயல் பேச்சில்லா கிராமமாக கொத்த மங்கலம் புவனேஸ்வரிபுரம் என்றதொரு பெயரும் இருந்ததை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்த ஊருக்கு அண்மையிலேயே உலக மகாதேவி யின் பெயரால் உலகமகாதேவிபட்டினம் என்ற புவனேஸ்வரிபுரம் என்ற இந்த ஊரும் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு ஊர்களும் ராஜராஜ சோழனது பாண்டிய நாட்டுப் படையெடுப் பின் பொழுது ஏற்பட்டனவாகும். தானம் பெற்றவர் மன்னரிடமிருந்து வேறொரு கிராம மாகிய ஊகுக்கடை யைப் பெற்று இருந்தார் என்பதும் என்ன காரணத்தினாலோ, அதனைக் கொடுத்துவிட்டு முடித்ததனா வயலைப் பெற்றார் என்பகனை வரி. 37ல் உள்ள பரிவர்த்தனை என்ற சொல் தெரிவிக்கின்றது.