பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322 சேர மன்னர் வரலாறு



போலச் சிறு முயற்சி செய்து பெரும்பயன் விளைத்துக் கொள்ளும் சிறப்புடையன் என்பது போலும் கருத்துப்பட வரும் பெயரால், இவன், யானைக் கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்று சிறப்பிக்கப்படுவானாயினன். இவனைப் பாடிய சான்றோர்களும் “வேழ நோக்கின் விறல்வேஞ் சேய்[1]” என்று பாராட்டிக் கூறுகின்றனர். இச் சேரமானுக்கு மாந்தரன் குடியோடு தொடர்புண்டு என்பது இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை எனப்படுவதால் தெரிகிறது.

திருவிதாங்கூர் நாட்டு ஆனைமுடிப் பகுதியில் ஆனக்கஞ்சிறு என்பதும், மலையாள மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளுவ நாடு வட்டத்திலுள்ள வெள்ளாத்திரி நாட்டுப் பகுதியில் இருக்கும் ஆனக்கன் குன்னு என்பதும் யானைக்கண் சிறை என்றும், யானைக்கண் குன்று என்றும் பொருள் தருவன. இரை இரண்டுக்கும் இடையிலுள்ள பகுதி பொறை நாடாதலால், இவை யானைக் கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் பெயரையும் புகழையும் நினைவு கூர்விக்கின்றன. இக் குறிப்புகளையன்றி, இவ் வேந்தர் பெருமானுடைய பெற்றோர் மக்கள் முதலியோரைப் பற்றிய குறிப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை.

யானைக்கண் சேயினது ஆட்சிக் காலத்தில் சேர நாடு மிக்க சிறப்புற்று விளங்கிற்று. தொண்டி நகரம் தலைநகரமாக இருந்தது. மக்கள் செல்வக் குறைபாடின்றி


  1. புறம். 22