இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
376 சேர மன்னர் வரலாறு
- “பெண்டிரும்,
- பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
- மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தனரே[1]”
என்றும் பாடி வருந்தியுள்ளார்.
பரணர் என்னும் சான்றோர், அவர்களுடைய வீழ்ச்சி கண்டு மன நோய் மிகுந்து, யானைப்படை; குதிரைப்படை, காலாட்படை யாவும் வீழ்ந்தது கூறி, அரசர் இருவரும் வீழ்ந்த நிலையை,
- “சாந்தமை மார்பில் நெடுவேல் பாய்ந்தென,
- வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர்”
என்று எடுத்துரைத்தார். அப்போது அவர்களை இழந்த நாடுகளின் நலத்தை எண்ணி, அவர்களுடைய நல்லரசால் நல்வாழ்வு பெற்று இனிதிருந்த நாடு என்னாகுமோ? என ஏங்கி,
- "இனியே
- என்னா வதுகொல் தானே கழனி
- ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
- பாசவல் முக்கித் தண்புனல் பாயும்
- யாணர் அறாஅ வைப்பின்
- காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே”[2]
எனக் கையறுகின்றார்.
பெருஞ்சேரலாதன்: சேரமான் பெருஞ்சேரலாதன் பெயர் சில ஏடுகளில் பெருந்தோள் ஆதன் எனவும் காணப்படுகிறது. இவன் காலத்தே சோழநாட்டில்