இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
70 சேர மன்னர் வரலாறு
வரலாறு போல இவரது வரலாறு எளிதிற் காணவியலாமல் இருப்பதற்கு இந்நிலையும் ஓர் ஏதுவாகும். அப்பெயர்களுள், வான வரம்பன், வானவன், குட்டுவன், குடக்கோ , பொறையன், இரும்பொறை, கடுங்கோ, கோதை என்பன சிறப்புடையனவாம். சேரலர், சேரல், சேரமான் என்பன பொதுப்பெயர்.
- “வென்றி நல்வேல் வான வரம்பன் [1] ”
- “வான வரம்பனை நீயோ பெரும்[2]”
- “தேனிமிர் நறுந்தார் வானவன்[3]”
- “பெரும்படைக் குதிரை நற்போர் வானவன் [4]”
- “வெல்போர் வானவன் கொல்லிக் குடவரைகள் [5]”
- “வசையில் வெம்போர் வானவன் [6]”
- “சினமிகு தானை வானவன் [7]”
- “மாண்வினை நெடுந்தேர் வானவன் [8]”
- “வில்கெழு தடக்கை வெல்போர் வானவன் [9]“
என வருவன வானவன், வானவரம்பன் என்ற பெயர்கள் பண்டை நாளைச் சான்றோர்களால் பெரிதும் விதந்து கூறப்படுவதை எடுத்துக் காட்டுகின்றன.
இந்த வானவன் என்ற பெயர் பொருளாக ஆராய்ச்சி செய்த அறிஞர்கள், “இதுவரை வானவர் என்ற பெயரால் பண்டை இவ்வமிசம் தெய்வ சம்பந்தம்
- ↑ ஷை 126
- ↑ அகம். 45.
- ↑ புறம். 2.
- ↑ அகம். 381.
- ↑ அகம். 309.
- ↑ அகம். 213.
- ↑ அகம். 77.
- ↑ புறம். 126.
- ↑ அகம். 159.