________________
18 சோர்தாயமுறை. மகப்பெற முடியாது. மணவாக்காதலனா, அவனைக் கூடிக் கடுங் கோவையீன்றாளென்றால், அது அவளையும் அவள் குடியையும் சுடும் பழியாவதல்லால், சேரர்குலம் தழைப் அவள் மகனின்று தந்தாளென ஈன் மக்களாற் புகழத்தகு தியன்றாம். அவள் பெற்ற கடுக் கோவை அந்துவற்குத் தகயனாக்குவதால் அவளுக்குச் சகோதர னுடன் விபசாரதோஷம் சம்பவிக்கும். இத்துணை விபரீதம் விளைக் கும் இக்கருத்தைவிட்டு, வேறு செம்பொருள் உண்டாயின் அதைக் கொள்ளுவதே எமது கடமையாகும். இவ்வாக்கியத்தில் வந்துள்ள விசேடணச்சொற்களின் நிலையும் அமைப்பும் விபரீதப் பொருளுக்குச் சிறிதும் இடமின்றி உண் மையை எளிதில் தெளிவிக்கின்றன. முதலிற் கடுங்கோவின் தாயை அந்துவனின் தந்தைமகளென்று கூறியதோடமையாமல், மீண்டும் அவளைப் பொறையன் தேவி என இடைத்தொடர் கொடுத்தும் விச டித்திருப்பதாத் புலவர் கருத்துச் சந்தேக விபாகங்களுக்குச் சிறிதும் இடந்தராமல் விளங்குகிறது. அந்துவனின் கோதரியும் பொறைய னின் மணைவியுமான கோமாட்டி கடுங்கோவைப் பெறுகின்றாள். அவன் பெற்ற கடுங்கோவே, பொறையனுக்குத் தாயனும், அந்துவற் குப் பிறங்கடையாம் மருமானு மாகின்றான். தெளிவான இத்தொடர் மொழிப்பொருளை மாற்றிக் கடுங்கோவை அந்துவனுக்கு ம. னென வே கொள்ளப்புகின், “ஒருவனே மற்றொருவனுக்கு ஒருங்கே மகனும் மருகனும் ஆவன்" என ஒரு அபூs அசம்பாவித விபரீ தத்தைக் கூறுவதாக முடியும். எப்படியும் இத்தொடரில் 'தேவி' என்பதற்கு மகளொப் பொருள் கொண்டு இவளைப் பொறையனுக்கு மகளாக்க இடமில்லை. தமிழ்வழக்கில் 'தேவி'ச்சொல் முறைப்பெயராக 'புதல்லிப் பொரு வில் ஆட்சி பெறாது என்பதை மேலே (7,8 - ஆம் பக்கம் - ஆம் பகுதி, 1-ஆவது உட்பிரிவில் காட்டியுள்ளேன். "இவள் தந்தை பொறையன்ல்லன்; பொறையன் தேவியான இவளுக்குப் பொறைய னல்லாத வேறு ஒரு தந்தை உண்டு" என்றே பதிற்றுப்பத்துப் பழையடரை காரரும் பதிப்பாசிரியர் மஹாமஹோபாத்தியாய சாமி சாதையரவர்களும் கருதுகிறார்கள். இதனை, 'ஒருதத்தை பொறை பன்தேவியின் பிதா' என்ற அவர்கள் உரைக்குறிப்பு விளக்குகின்றது.