102
சைவ இலக்கிய வரலாறு
அவர்களுடைய பெயரிடப் பெற்றிருப்பது கண்கூடு. இந்தச் செயல் நம் நாட்டு மக்களின் பொதுப்பண்பு. இப்பண்பு இன்று நேற்றுத் தோன்றியதாகாது. பண்டிருந்தே தொன்று தொட்டு வந்ததாகும். ஆதலால், ஞானசம்பந்தர் தோன்றி, ' இன்னிசையால் தமிழ் பரப்பும் ' பெருங்தொண்டு செய்தது குறித்து, அவர்பால் மக்கட்குண்டான பேரன்பால், திருஞான சம்பந்தனல்லூர்[1] திருஞான சம்பந்த சதுர்வேதி மங்கலம்[2]’ என ஊர்களும், திருஞான சம்பந்த வளாகம்[3] திருஞானசம்பந்தன் தளம்[4] என இடங்களும், திருஞானசம்பந்தர் கோயில்[5] திருஞானசம்பந்தீஸ்வரம் எனக் கோயில்களும், திருஞானசம்பந்தன் மடம்[6] திருஞானசம்பந்த நம்பி மடம் செல்வஞானசம்பந்தர் மடம்[7] சீகாழி நாடுடைய பிள்ளை திருமடம். பரசமய கோளரிமடம் [8]திருஞான சம்பந்தர் திருக்குகை'[9] என மடங்களும், திருஞானசம்பந்தர் நந்தவனம்[10] திருஞான சம்பந்தர் மடப்புறம்' என நந்தவன முதலியனவும் பல காலங்களில் பல மக்களால் நிறுவப்பெற்றுள்ளன. இவ்வாறே, திருஞானசம்பந்தன் மடை'திருஞானசம்பந் தன்நாழி[11] என வேறு பலவற்றிற்கும் ஞானசம்பந்தர் பெயர் வழங்கப்பெற்றுளது. - -
திருஞானசம்பந்தர் பாண்டிநாட்டில் சமணரொடு வாது புரிந்து வெற்றியெய்திய செயல், தமிழ் நாட்டுச் சைவசமய உலகில் ஒரு புதிய கிளர்ச்சியையுண்டுபண்ணிற்று. அவர் சென்ற இடந்தோறும், அச்சிறப்பு, மக்கள் உள்
.
- ↑ 1. S. I. I. Vol. VIII. No. 166; 94 of 1918; 310of 1923 ; 180
- ↑ 2. S. I. I. Vol. VI. No. 48.
- ↑ 3. Ibid. Vol. VII. No. 1025.
- ↑ 4. S. T. T. Voi. VIII. No. 403
- ↑ 5. S. I. I. Vol. V. No. 988.
- ↑ 7. 199 of 1932-3.
- ↑ 9. 358 of 1922. VII. No. 785
- ↑ 11. 534 of 1938.
- ↑ 12. VIII. No. 206.
- ↑ 13. 54 of 1932-3
- ↑ 16. 214 of 1910. *