தமிழ் நாட்டு வரலாறு
5
கட்டியவன் இவ்வேந்தர் பெருமான்,
பரமேசுரன் II (700-710) இவன் இராசசிங்கனான இரண்டாம் நரசிங்கனுக்குப்பின் அரசுகட்டில் ஏறியவன். இவன் கலியின் சேட்டைகளைக் கடிந்து வியாழ பகவான் .உரைத்த நீதிப்படி ஆட்சி செய்தான் என்று செப்பேடுகள்[1]கூறுகின்றன.
நந்திவன்ம பல்லவ மல்லன் (710-755) இவன், சிம்மவிஷ்ணுவின் மக்களில் ஒருவனான வீமவன்மன் வழி வந்தோருள், இரணியவன்மன் என்பவனுடைய மக்கள் நால்வருள் எல்லோருக்கும் இளையவன். பரமேசுவரன் மகப்பேறின்றி இறந்ததனாலும், இவன் உடன்பிறந்தோர் மூவரும் அரசேற்க இசையாமையாலும் இந்நந்திவர்மன் பல்லவ அரசுகட்டிலேறினான். இவன் நெடுங்காலம் ஆட்சி புரிந்தான் என்பர்.
தந்திவன்மன் (775-826) இரண்டாம் நந்திவன்மனுக்குப்பின் அவன் மனைவி இரேவா என்பாட்குப் பிறந்தவன் இத்தந்திவன்மன். இவன் ஐம்பது ஆண்டுகட்குக் குறையாமல் அரசுபுரிந்துள்ளான். இவன் காலத்தில் பாண்டி வேந்தர்கள் மேன்மையுறத் தலைப்பட்டனர்.
நந்திவன்மன் III (கி.பி. 826-849). இவன் தந்தி வன்மனுக்கு மகனாவான். இவனே தெள்ளாறெறிந்த நந்தி வன்மன் எனப்படுபவன். இவனுக்கும் பாண்டியர்கட்கும் கடும்போர் நடந்துளது.
நிருபதுங்கவன்மன் (கி.பி. 849-875), இவன் தெள்ளாறெறிந்த நந்திவன்மனுடைய மகன்; இவனோடு சோழநாட்டு அரிசிலாற்றங்கரையில் போர் உடற்றிய பாண்டியன், வரகுணன் மகனான ஸ்ரீமாற பரசக்ர கோலாகலன் என்பானாவன்.
நிருபதுங்கனுக்குப்பின்னர் அபராஜிதன், கம்பவன்மன், வயிரமேகவன்மன், சந்திராதித்தன், கந்தசிஷ்யன், விசய நரசிங்கவன்மன் எனப் பலர் ஆங்காங்கே இருந்திருக்கின்றனர். இவருள் அபராஜிதன் கங்கவேந்தனை முதல்
- ↑ S. I. I. Vol. No. 75. Verse. 26.