திருநாவுக்கரசர்
181
சேந்திரன் காலத்திலும், தஞ்சாவூர்ப் பெரிய கோயிலிலும்[1] திருமழபாடியிலும்[2] முறையே பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனுன தென்னவன் மூவேந்த வேளானும், திருமால் அரங்கனை திருப்பள்ளித் தாமப்பிச்சன் என்பவனும் அவன் மனைவியும், வீர ராசேந்திரன் காலத்தில் அகத்திய கொண்டாவில் உத்தம சோழ கங்கனை செல்வகங்கன் மனைவியும்[3], திருவாரூர்க் கோயிலில் இரண்டாங் குலோத்துங்கனும்[4], திருவலஞ்சுழியில் இரண்டாம் இராசராசன் காலத்தில் தேவரடியார் ஆட் கொண்டான் தேசும் திருவும் உடையாளும், கிழக்கடைய நின்றாளும் ஆகிய இவ்விருவரும்[5], திருக்கச்சூரில் மூன்றாங் குலோத்துங்க சோழனும்[6], சூலமங்கலத்துக் கரி யுரித்த நாயனார் கோயிலில் சடையவன்மன் பராக்கிரம பாண்டியன் காலத்தில் திருநாவுடையார் என்பவரும்[7], இராமநாதபுர மாவட்டத்துத் திருப்புத்துார் உருத்திர கோட்டிச்சுரத்தில் அருவியூர் வாணிகன் புற்றிடங் கொண்டான் திருச்சிற்றம்பல முடையானை ஞானசம்பந்தன் என் பவனும்[8], திருநாவுக்கரசர் திருவுருவத்தை எழுந்தருள்வித்து நாட்பூசனை முதலிவற்றுக்கு வேண்டும் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
திருநாவுக்கரசர் பிறந்த ஊராகிய திருவாமூரிலும்[9]அவர் இறுதிக் காலத்தே இருந்து வழிபாடு செய்த
திருப்புகலூரிலும்[10] எழுந்தருளப் பெற்றிருந்த திருநாவுக்கரசர் திருவுருவ வழிபாட்டுக்கென, முதல் இராசராசன் காலத்திலும் முதற் குலோத்துங்கன் காலத்திலும் நிலங்கள் நிவந்தமாக விடப்பட்டுள்ளன. இவ்வாறே, திருப்புத்தூர்[11] கோவிலுரர் எனப்படும் திருவுசாத்தானம்[12] சூலமங்கலம்[13].