நம்பியாரூரர்
203
நம்பியாரூரது காலம்
நம்பியாரூரர் பாடியருளிய திருப்பதிகங்களுள், "மண்ணுலகம் காவல்பூண்ட உரிமையால் பல்லவர்க்குத் திறை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும் பெருமையார்"[1] எனவரும் திருப்பாட்டில் குறிக்கப்படும் பல்லவ மன்னன் தந்தி வன்மன்; அவனே திறைகொடா மன்னவரை உடையணுயிருந்தான் என்றும், அவன் காலம் கி. பி. 780-க்கும் 830-க்கும் இடைப்பட்ட காலம் என்றும், எனவே அவன் காலத்தவரான நம்பியாரூரர் காலம் எட்டாம் நூற்றாண்டாக வேண்டும் என்றும் திரு. M. S. பூரணலிங்கம் பிள்ளையவர்கள்"[2] கூறுவர். அவர்க்குப் பின் திரு. கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள், நம்பியாரூரர் திருத்தொண்டத் தொகையில், கடல் சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற கோமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்"[3] என்றவிடத்துக் காடவர்கோன் கழற்சிங்கன் என்றது இரண்டாம் நரசிம்ம வன்மனையே குறிக்கும். என்றும், தம்பால் பேரன்புடையராகிய கழற்சிங்கர் பொருட்டு இறைவன் திறைகொடா மன்னவரைத் திறை
கொடுக்குமாறு செய்திருப்பர் என்றும், “ சிங்கம் என்பது நரசிங்கம் என்னும் சொல்லின் முதற் குறையாகும்" என்றும், நரசிங்க முனையரையர் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட சிற்றரசராய் இருக்கலாம் என்றும், எனவே நம்பியாரூரர் எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர் என்றும் [4]கூறுகின்றார். இனி, திரு. சதாசிவப் பண்டாரத்தாரவர்கள், இரண்டாம் நரசிங்க வன்மன் காலமே நம்பியாரூரர் காலமென்றும், நம்பியாரூரரை இளமையில் வளர்த்த நரசிங்க முனையரையர் இரண்டாம் நரசிங்க வன் மன் கீழிருந்த குறுநிலத் தலைவர் என்றும், கழற்சிங்கன் என நம்பியாரூரர் குறிப்பது இரண்டாம் நரசிங்க வன்