நம்பியாரூரர்
215
திருமால் கண்மலர் இட்டு இறைவனை வழிபட்டது,[1] இறைவன் தக்கன் வேள்வியைச் சாடியது,[2] இராவணனை மலையின் கீழ் அடர்த்தருளியது,[3] அருச்சுனற்கு வேடனாய்ச் சென்று பாசுபதம் அருளியது,[4] இந்திரன் வழிபட்டது,[5] அயிராவதம் வழிபட்டது[6] அகத்தியர் வழிபட்டது,[7] காமதேனு வழிபட்டது,[8] காளியொடு இறைவன் திருநடனம் செய்தது,[9] தாருக வனத்து முனிவர் வரலாறு,[10] இறைவன் ஆலின்கீழ் இருந்து அறம் சொன்னது,[11] கலையநல்லூரில் பிரமன் இறைவனைப் பரவியது,[12] மார்க்கண்டேயர் பொருட்டுக் காலனைக் காய்ந்தது,[13] திருப்புன்கூரில் மழைகுறித்துப் பன்னிருவேலி நிலம் பெற்றது[14] இறைவன் தில்லை மூவாயிரவர்க்கு மூர்த்தியெனப் படுவது[15] முதலிய பல செய்திகள் நம்பியாரூரரால் நன்கு குறிக்கப்படுகின்றன.
இவற்றின் வேறாக, திருத்தொண்டத் தொகையில் தனியடியார் அறுபத்து மூவர் வரலாற்றுக் குறிப்பும், தொகையடியார் ஒன்பதின்மர் குறிப்பும் குறிக்கப்படுகின்றன. அவருள் புகழ்த்துணையார்,[16] கோட்புலியார்,[17] சண்டேசுரர்,[18] ஏயர்கோன் கலிக்காமர்[19] திருநீலகண்டர்[20] கோச்செங்கணான்,[21] கண்ணப்பர்[22] முதலியோரைப் பற்றிய குறிப்புக்களும், திருஞானசம்பந்தர் ஞானம் பெற்றதும்,[23] அவர் திருத்தாளம் பெற்றதும்,[24] திருநாவுக்கரசர் திருப்-
- ↑ சுந். தே. 66:3.
- ↑ சுந். தே.16:6.
- ↑ ௸. 16: 7; 55:9.
- ↑ ௸. 53: 8; 55: 7; 66: 3.
- ↑ ௸. 65 :5.
- ↑ ௸. 63: 7.
- ↑ ௸. 65 :5.
- ↑ ௸. 65 :4.
- ↑ ௸. 70:4.
- ↑ ௸. 65 : 6.
- ↑ ௸. 55:7
- ↑ ௸. 16 :10.
- ↑ ௸. 62: 6; 63 :4.
- ↑ ௸. 55:2.
- ↑ ௸. 90 : 7.
- ↑ ௸. 9 :6.
- ↑ ௸. 15: 10.
- ↑ ௸. 16 : 3.
- ↑ ௸. 55 3.
- ↑ ௸. 58: 9.
- ↑ ௸. 65 : 1.
- ↑ ௸. 65: 2; 88: 6
- ↑ ௸. 97: 9.
- ↑ ௸. 62 ; 8.