228
சைவ இலக்கிய வரலாறு
இவற்றோடு இயையும் வாழ்வு, “சுவையிலாப் பேதை வாழ்வு.”[1] முன்னே மணமென்று சொல்லி மகிழ்வுறும் தாய் தந்தையரும் பிறரும், பின்னே பிணம் எனச் சுட்டெரிப்பர். இதனை யுணராதார்,
“தாழ்வெனும் தன்மை விட்டுத்
தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதித் தொண்டர்
என்று தெருட்டுகின்றார்.
இச் சுவையிலாப் பேதை வாழ்வைச் சுவையுடைத்து எனக் கருதுவோர் பலரும், “பாவமே புரிந்து பல பகர்ந்து அலமந்து உயிர் வாழ்க்கைக்கு ஆவ என்று உழந்து அயர்ந்து[3] வீழ்வர்.” அவர்க்கு உயிர் வாழ்க்கை யொன்றே கருத்து அதனால் அவர்கள் அதையே நினைந்து உடல் தளர்ந்து மாநிதி இயற்றி “என்றும் வாழலாம்”.[4] எனப் பேசுவர். வேந்தராய் உலகாண்டு அறம்புரிந்து வீற்றிருந்த இவ்வுடம்பு தேய்ந்து இறந்து வெந்துயர் உழக்கும்;[5] வேறு சிலர் சடை முடித்துத் தவம் முயன்று அவமாயின. பேசுவர்; அதனால் பிறவித்துயர் நீங்குவது அரிது;[6] எத்திறத்தோர்க்கும், சுற்றமும் துணையும் பிறரும் கண்டு கண்ணீர் சொரிந்து அழ, உயிர் உடம்பின் நீங்கிப் போவது நிச்சயம்.[7] வேறு சிலர், தேரர் சமணர் முதலியோருடைய வேற்றுச் சமயம் கூறும் தவம் மேற்கொண்டு அவஞ் செய்வர்; அவர், தமது தவத்தின் அவத்தன்மை யுணர்ந்து நீங்கல் வேண்டும்; தளிகளையும் சாலைகளையும் நிறுவுவது. தவமென முயல்வர்; அவர்கட்கு அவை தவமாவது, தம்மை உணர்ந்து தம்மை அடிமையாகவுடைய இறைவனை உணர்ந்து செய்யுங் காலையேயாம்.[8] சுருங்கச் சொல்லுமிடத்து, உறுதி நாடுவோர், இறைவன் திருக்கோயில்களை